Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
உங்கள் கண்கள் சோர்வாக இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!
இங்கு கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு கண் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடலின் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கப்படும் பராமரிப்புக்களைப் போலவே, கண்களுக்கும் போதிய பராமரிப்புக்களையும் ஓய்வையும் வழங்க வேண்டியது அவசியம்.
அதிலும் நீங்கள் தினமும் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் கண்கள் மிகவும் வேகமாக சோர்வடைந்துவிடும் என்பது தெரியுமா? உங்கள் கண்கள் சோர்வடைந்திருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளைத் தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

கண் எரிச்சல் அல்லது கண்கள் சிவப்பாதல்
உங்கள் கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது கண்கள் சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.

பார்ப்பதில் சிரமம்
கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். அதாவது அனைத்து பொருட்களும் கண்களுக்கு மங்கலாக தெரிய ஆரம்பிக்கும்.

கண்களில் இருந்து நீர் வடிதல்
கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பித்தாலும், கண்கள் சோர்வடைந்துள்ளது என்பதற்கான அறிகுறியாகும். இந்நேரத்தில் கண்களுக்கு ட்ராப்ஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக, மருத்துவரை அணுகி, சரியான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுங்கள்.

கண் கூச்சம்
கண்கள் மிகவும் சோர்ந்திருந்தால், கண் இமைகளைத் திறப்பதே கடுமையாக இருக்கும் மற்றும் வெளிச்சத்தை பார்த்தாலே கண்கள் கூச ஆரம்பிக்கும். இம்மாதிரியான நேரத்தில் மருத்துவரை உடனே அணுக வேண்டியது அவசியம்.

கண் வலி
கண்களில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும் போது, அதாவது கண்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரமான தூக்கத்தை சரியாக மேற்கொள்ளாமல் இருந்தால், கண்கள் வலிக்க ஆரம்பிக்கும். அதுவும் கண்களில் வலி ஆரம்பித்து, அது அப்படியே கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகு பகுதியையும் பாதிக்கும்.



Click it and Unblock the Notifications