Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
No Gas No Oil No Boil Aval Payasam Recipe In Tamil: இன்று திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுளுக்காக காரடையான் நோன்பை மேற்கொள்வார்கள். அப்படி நோன்பு மேற்கொள்ளும் போது, கடவுளுக்கு இனிப்புக்களை படைத்தும் வழிபாடு செய்வோம்.
அதுவும் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அடுப்பை அதிகம் பயன்படுத்தாமல் செய்யக்கூடிய ரெசிபிக்களை பலரும் தேடி, அதை ட்ரை செய்து வருகின்றனர்.

இந்த காரடையான் நோன்பிற்கு நீங்கள் பாயாசம் ஏதாவது செய்ய நினைத்தால், அடுப்பில்லாமல் செய்யக்கூடிய அவல் பாயாசத்தை செய்யுங்கள். இந்த அவல் பாயாசத்தை அடுப்பு பயன்படுத்தாமல் எப்படி செய்வதென்று மிகவும் பிரபலமான செஃப் தீனா அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியுள்ளார்.
உங்களுக்கு செஃப் தீனா அவர்களின் ஸ்டைலில் அவல் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு அவல்/வெள்ளை அவல் - 100 கிராம்
* வாழைப்பழம் - 3-4
* பெரிய தேங்காய் - 1
* நாட்டுச்சர்க்கரை - சுவைக்கேற்ப
* முந்திரி - 10-15
* உலர் திராட்சை - 10-15
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சிவப்பு அவலை எடுத்து, அதில் நீரை
ஊற்றி குறைந்தது 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காயை சேர்த்து, 2 டம்ளர் நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த தேங்காயை வடிகட்டி கெட்டியான தேங்காய் பாலை எடுத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீதுள்ள தேங்காயை மீண்டும் ஜாரில் போட்டு, 1 டம்ளர் நீரை ஊற்றி
நன்கு அரைத்து, அதை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த அவலுடன் வாழைப்பழத்தை நசுக்கி சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், பொடியாக
நறுக்கிய முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு மசித்து
விட வேண்டும்.
*அடுத்து மசித்த பொருட்களை தேங்காய் பாலுடன் சேர்த்து நன்கு கலந்து
விட்டால், சுவையான அவல் பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications