Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல பிள்ளைகளுக்கு இப்படி செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Rava Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுத்து ஆற்ற வேண்டுமா? உங்கள் பிள்ளைகளுக்கு புட்டு என்றால் ரொம்ப பிடிக்குமா? பொதுவாக அரிசி மாவை கொண்டு தான் புட்டு செய்வோம். ஆனால் 1 கப் ரவை இருந்தால், அதைக் கொண்டும் பஞ்சு போன்று மென்மையாக புட்டு செய்யலாம் என்பது தெரியுமா?
இந்த புட்டு மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். ஒருவேளை உங்கள் பிள்ளைகளுக்கு புட்டு பிடிக்காதென்றால், இந்த புட்டை செய்து கொடுத்தால், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த புட்டு ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு ரவா புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த ரவை - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 (உடைத்தது)
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து
கைகளால் பிரட்டி, கட்டிகளின்றி பிசைந்து விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு இட்லி தட்டில் ஒரு வாழை இலையை வைத்து, அதன் மேல் இந்த
புட்டு மாவை போட்டு, இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி, அடுப்பில்
வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி மூடியை திறந்து, அந்த
புட்டு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, புட்டுடன்
சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறினால்,
சுவையான ரவா புட்டு தயார்.



Click it and Unblock the Notifications











