Latest Updates
-
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் வெற்றியையும், பணத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் -
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
தோசையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? இது தமிழ்நாட்டில் இல்லையாம் -
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம் -
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது..
பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஊதுவது ஏன் என தெரியுமா?
குழந்தையில் இருந்து நாம் செய்து வரும் ஒரு பழக்கம். ஆனால், ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என தெரியாது. நாம் இன்று செய்து வரும் பல செயல்கள் அப்படி தான் இருக்கிறது.
ஆனாலும், பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி அதை ஊதிவிட்டு, கேக் வெட்டி ஊட்டிவிட்டு மகிழ்வது நமது வாழ்வில் ஒவ்வொரு வருடத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.
இது ஏன் என தெரியாமல் செய்வது சரியா? வாங்க தெரிஞ்சுக்கலாம்...

கிரேக்க முறை!
பண்டைய காலத்து கிரேக்க முறை கலாச்சாரத்தில் அவர்கள் அவர்களது ஆண், பெண் தெய்வங்களை வணங்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றுவது வழக்கமாக இருந்து வந்தது.

ஆர்ட்டெமிஸ்!
பண்டைய கிரேக்கர்கள் அவர்களது நிலா கடவுளான ஆர்ட்டெமிஸ்-ஐ வணங்கும் போது கேக் வைத்து அதில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும் முறையை பின்பற்றி வந்தனர்.

கேக்கில் மெழுகுவர்த்தி ஏன்?
நிலாவை குறிக்கும் வகையில் வட்டமான வடிவில் கேக் அமைத்து ஆர்ட்டெமிஸ் கடவுளை கிரேக்கர்கள் வணங்கினர். அதில் மெழுகுவர்த்தி ஏற்றியதற்கு காரணம், வணங்கும் போது அது நிலா போன்றே ஜொலிக்கும் என்பது தான்.

ஜெர்மன் வழக்கம்!
நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஜெர்மன் வழக்கத்தில் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடும் முறை இருந்து வருகிறது.
ஜெர்மன் மக்கள் கேக்கின் நடுவில் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடுவதை லைட் ஆப் லைப் என்பதை குறிப்பிடும் வண்ணம் கடைப்பிடிக்கின்றனர்.

அறிஞர்கள் வாக்கு!
அறிஞர்கள் சிலர் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுவது, அதில் இருந்து வெளிப்படும் புகை வானில் வாழும் கடவுள்களின் வாழ்த்து பெற செய்கிறது என்றும் கூறியுள்ளனர். சிலர் அந்த புகை கெட்டவை நீங்குகின்றது என்பதை வெளிக்காட்ட என்கின்றனர்.



Click it and Unblock the Notifications