Just In
- 21 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 58 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 2 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 5 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா?
குடிப்பழக்கம் என்பது உடல் நலத்திற்கு மிகவும் கேடான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். குடிச்சா போதை ஏறி திண்டாடுபவர்களும் உண்டு. ஆனால் சில பேருக்கு குடிக்காமலேயே போதை ஏற்படுமாம். இது ஒரு வகை நோய்க்க
குடிப்பழக்கம் என்பது உடல் நலத்திற்கு மிகவும் கேடான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். குடிச்சா போதை ஏறி திண்டாடுபவர்களும் உண்டு. ஆனால் சில பேருக்கு குடிக்காமலேயே போதை ஏற்படுமாம். இது ஒரு வகை நோய்க்குறி என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக குடிப்பழக்கத்தில் இருப்பவர்கள் அல்லது குடிப்பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த ஆட்டோ மதுபான நோய்க்குறியால் பாதிக்கப்படுகிறார்கள். இது ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் கூட குடிக்காவிட்டாலும் குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டுவார்களாம். அதைப் பற்றிய விரிவான தொகுப்பு தான் இந்த கட்டுரை.
ஆட்டோ மதுபான நோய்க்குறி
குடிப்பழக்க நோய் அதாவது, குடல் நொதித்தல் நோய்க்குறி என்பது மனித உடலில் எண்டோஜெனஸ் எத்தனால் தானாகவே குடலில் நொதித்தல் ஆகிறது. இந்த நொதித்தல் செயல் காரணமாக மது குடித்த போதை அல்லது மயக்கம் உண்டாகிறது.
குடலில் ஏற்படும் எண்டோஜெனஸ் நொதித்தல் குடலில் அதிகளவு எத்தனாலை உற்பத்தி செய்கிறது. இதனால் அந்த நபரின் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளான சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை ஆல்கஹால் ஆக மாற்றுகிறது. இதனால் தான் நாம் மது அருந்தாவிட்டால் கூட மயக்கம் ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு பெண் வாகனம் ஓட்டும் போது மது அருந்தி விட்டு ஓட்டியதாக போலீசார் பிடித்தனர். அவரது இரத்தத்தில் நான்கு மடங்கு ஆல்கஹால் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவரை விசாரித்த போது தான் அவருக்கு ஆட்டோ மதுபான நோய்க்குறி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆட்டோ மதுபான நோய்க்குறியின் காரணங்கள்
இந்த நிலையை கண்டறிவது மிகவும் கடினம். இது அரிதாகவே ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளும் தவறாக கருதப்படுகிறது. இந்த நோய்க்கு ஒரே காரணம் வயிற்றில் அதிகமாக ஈஸ்ட் உற்பத்தி செய்யப்படுவதே ஆகும். ப்ரூவரின் ஈஸ்ட், கேண்டிடா கெஃபிர், கேண்டிடா கிளாப்ராட்டா மற்றும் கேண்டிடா அல்பிகான்ஸ் ஆகிய நான்கு வகையான ஈஸ்ட் டுகள் ஆட்டோ மதுபான நோய்க்குறிகளை உண்டாக்குகிறது.
ஆட்டோ மதுபான நோய்க்குறியின் அறிகுறிகள்
ஆட்டோ மதுபான நோய்க்குறியின் பொதுவான அறிகுறிகளாவன:
* மதுபானம் அருந்தாமலேயே மது அருந்தியது போன்ற போதை உணர்வு இருக்கும்
* மிகவும் குறைவான அளவில் மது அருந்தினாலும், சட்டென்று அதிகளவு போதை ஏறும்
இதர அறிகுறிகள்
* தலைச்சுற்றல்
* தொடர்ச்சியான தலைவலி
* நீரிழப்பு உணர்வு
* உலர்ந்த வாய்
* இலக்கற்ற குமட்டல் மற்றும் வாந்தி
* களைப்பு
* எதுக்களித்தல்
* நெஞ்செரிச்சல்
* மனம் அலைபாய்வது போன்று தோன்றும்.
* நினைவாற்றல் தொடர்பான சிக்கல்கள்
விளைவுகள்
* எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி
* நாள்பட்ட சோர்வு
* கவலை மற்றும் மனச்சோர்வு
ஆபத்து
* பெரியவர்கள் சிறியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. ஒருவரின் ஆரோக்கியத்தை பொறுத்தே இது பாதிப்பை ஏற்படுத்தும்.
* பிறக்கும் போதே இந்த நோய்க்குறி தோன்றவில்லை. ஆனால் சில தூண்டுதல்களால் இது உருவாகிறது.
* சில சமயங்களில் முறையற்ற கல்லீரல் செயல்பாட்டால் இது ஏற்படுகிறது. உடலில் இருந்து கல்லீரலால் ஆல்கஹாலை வெளியேற்ற முடியவில்லை என்றால் கூட ஒரு நிமிடத்தில் குடலில் ஈஸ்ட்டுகள் பெருகத் துவங்கிவிடும். இப்படி ஈஸ்ட்டுகள் பெருகுவதால் மயக்கம் அல்லது போதை ஏற்படுகிறது. ஏன் மூன்று வயது சிறுமிக்கு கூட பழச்சாறு குடித்த பிறகு இந்த நோயால் போதை ஏற்பட்டுள்ளது.