Just In
- 3 min ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தினமும் பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இந்தியாவில் 5000 ஆண்களுக்கு முன் தோன்றிய உடற்பயிற்சி தான் யோகாசனம். யோகாசனம் என்றால், மனதை அலையவிடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலையவிடாமல் இருக்கத் தான் யோகா செய்யும் போது கண்களை மூடிக் கொள்கின்றோம். யோகாசனங்களில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நன்மைகளை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு யோகாவும் ஒவ்வொரு விதமான செயல்முறையைக் கொண்டிருக்கும்.
இருப்பதிலேயே பத்மாசனம் என்ற யோகா தான் செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும், சிம்பிளாகவும் இருக்கும். இந்த யோகாசனம் செய்ய தினமும் 10 நிமிடங்கள் போதும். இந்த யோகாசனத்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். இப்போது பத்மாசனத்தை எப்படி செய்வது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்...
இடுப்பிற்கு நல்லது
பத்மாசனம் செய்யும் போது இடுப்பு மற்றும் கணுக்கால்களில், இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், அவ்விடங்களை நீட்சியடையச் செய்யும்.
ரிலாக்ஸ் அடையச் செய்யும்
பத்மாசனம் செய்யும் போது ஒரே இடத்தில் அமர்ந்து, மனதை ஒருநிலைப்படுத்தி உடற்பயிற்சி செய்வதால், மனம் ரிலாக்ஸ் அடைந்து, மன அழுத்தத்தைப் போக்கும்.
விழிப்புணர்ச்சி
பத்மாசனத்தை தினமும் செய்து வருவதன் மூலம் நமது மூளை நன்கு சீராக செயல்பட்டு, விழிப்புணர்வுடன் செயல்பட உதவும். இதனால் அலுவலகத்தில் நமது உற்பத்தி திறன் அதிகரித்து, நல்ல பெயரை வாங்கலாம்.
தண்டுவடத்திற்கு நல்லது
பத்மாசனம் செய்யும் போது, நேராக அமர்ந்து செய்வதால், அது தண்டுவடத்திற்கு நல்ல உடற்பயிற்சியாக அமைந்து, தண்டுவடத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
மாதவிடாய் பிரச்சனைகள்
பெண்கள் பத்மாசனம் செய்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மூட்டுகளுக்கு நல்லது
பத்மாசனம் செய்யும் போது மூட்டுகளை மடக்கி செய்வதால், இது மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். மேலும் பத்மாசனம் செய்வதன் மூலம், அடிவயிறு மற்றும் இடுப்பெலும்பிற்கும் நல்லது.
பத்மாசனம் செய்யும் முறை
முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். பின் வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் இடது காலின் தொடை மீது, குதிகால் வயிற்றை தொடும் அளவிற்கு வைக்கவும். இதேப்போல் மற்றொரு காலையும் மடக்கி, வலது காலின் தொடையின் மீது, வயிற்றை தொடும் அளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.
பின் நேராக அமர்ந்து, கண்களை மூடி கைகள் இரண்டையும் முட்டிகளின் மீது, உள்ளங்களை மேல் நோக்கியவாறு, கட்டை விரல், ஆள்காட்டி விரலைத் தொட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் 5 நிமிடம் மூச்சை உள் வாங்கி வெளியே விட்டவாறு அமர வேண்டும். பிறகு இதேப்போல் கால் மாற்றி மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.