Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா?
இந்த நூற்றாண்டின் மிகவும் பதட்டமான காலகட்டத்தில் உலகம் இப்போது உள்ளது. இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தற்போது ஈரானும் பதில் தாக்குதலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த போர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே செல்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி தெஹ்ரான் பதிலடி கொடுத்தது
இந்த போரால் மத்திய நாடுகள் மட்டுமின்றி இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறை, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு போன்றவை இந்த போரின் மறைமுக விளைவுகளாகும். இந்த சமீபத்திய மோதல் அணு ஆயுதப் போர் அல்லது மூன்றாம் உலகப்போரை உருவாக்குமோ என்ற அச்சத்தை மக்களிடையே எழுப்பியுள்ளது. மேலும் பல்கேரியாவின் பாபா வாங்கா, நோஸ்ட்ரடாமஸ் போன்ற உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசிகள் 2026 ஆம் ஆண்டில் உலகப்போர் ஏற்படலாம் என்று கூறியுள்ளது இந்த அச்சத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் மூன்றாம் உலகப் போரை தூண்டுமா?
பாபா வாங்கா தனது கனவுகளில் எதிர்கால நிகழ்வுகளைக் கண்டார், அதுவே அவர் கூறிய தீர்க்கதரிசனங்களின் அடிப்படையாக மாறியது. அவரது தீர்க்கதரிசனங்களில் ஒன்று கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கிப் பரவும் ஒரு போரைப் பற்றியது என்று நம்பப்படுகிறது. மத்திய கிழக்கு தற்போது ஒரு பெரிய மோதலின் பிடியில் உள்ளது, இது மேலும் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புளள்து, ஏனெனில் தற்போது ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா மோதலில் சிக்கியுள்ளதால், பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுமா என்று மக்கள் அஞ்சுவது மிகவும் இயல்பானதுதான்.
மத்திய கிழக்கு போர் உலகளாவிய போராக மாறக்கூடும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார். மேலும் தற்போது தினமும் உலகை அச்சுறுத்தும் செய்திகளை வெளியிட்டு வருகிறார். ஈரானிய ஆட்சியின் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து "மேற்கு" இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இதை ஒரு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அழைத்தாலும், பல ஐரோப்பிய நட்பு நாடுகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது இதை உலக நாடுகளின் போராக மாற்றக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளது.
ஐரோப்பாவில் நடக்கப்போகும் போர்
பாபா வாங்கா, ஐரோப்பாவில் தொடங்கி மக்கள் தொகையில் பெரும் சரிவுக்கு வழிவகுக்கும் ஒரு போரைப் பற்றி அவரது கணிப்பில் கூறியுள்ளதாக நம்புகிறார்கள். ஈரான்-அமெரிக்கா மோதல் குறைந்தது நான்கு வாரங்கள் நீடிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இது மற்ற நாடுகளும் இதில் ஈடுபட வழிவகுக்கும், குறிப்பாக ஈரான் அமெரிக்க இராணுவ தளங்களை வைத்திருக்கும் நாடுகளையும் தாக்குவதால் இது மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
நோஸ்ட்ராடாமஸ் ஏழு மாதப் போரைக் கணித்துள்ளார்
பிரெஞ்சு மருத்துவரும், தீர்க்கதரிசியுமான நோஸ்ட்ராடாமஸ் 2026 ஆம் ஆண்டில் ஒரு பெரிய போரை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரது புத்தகத்தின் ஒரு பகுதி, "Seven months great war, people dead through evil / Rouen, Evreux the King will not fail" என்று கூறுகிறது. இந்த தீர்க்கதரிசனம் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை மோசமடைந்தால், அது பல மாதங்கள் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.
ரஷ்ய அதிபர் உலகத் தலைவராக மாறுவார்
2026 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் முக்கிய தீர்க்கதரிசனங்களில் ஒன்று இந்த வருடம் நடைபெறும் பெரிய உலக மோதலால் உலக அரசியலில் ஏற்படும் மாற்றம் அடங்கும். தற்போது நடக்கும் போரால் மேற்கு நாடுகள் சரிந்த பிறகு விளாடிமிர் புதின் உலகத் தலைவராக எழுச்சி பெறுவதை அவர் முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலும் காசாவும் இராணுவ மற்றும் அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், உக்ரைன் போர் இன்னும் முடிவடையவில்லை. இந்த சூழலால் ரஷ்யாவின் செல்வாக்கு பெருமளவில் உயரும்.
புதிய உலகத் தலைவரின் எழுச்சியை நோஸ்ட்ரடாமஸும் கணித்துள்ளார்
"தேனீக்களின் பெரும் கூட்டம் எழும்... இரவில் பதுங்கியிருந்து தாக்குதல்..." என்று நோஸ்ட்ராடாமஸ் எழுதினார். இந்தத் தீர்க்கதரிசனம் டிரம்ப் மற்றும் புதினுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது இருவரும் 2026 இல் பெரிய வெற்றிகளைப் பதிவு செய்வார்கள் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், மற்றொரு தீர்க்கதரிசனம் ஒரு புதிய உலகத் தலைவரைப் பற்றி குறிக்கிறது. "நிழல்கள் விழும், ஆனால் ஒளியின் மனிதன் எழுவான். நட்சத்திரங்கள் உள்ளே பார்ப்பவர்களை வழிநடத்தும்" என்று அவர் எழுதினார். அந்த உலகத் தலைவராக யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications











