Latest Updates
-
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா?
இன்று உலகின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் வங்கிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தற்போது உலகளவில் 60,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்துவதிலும், நிர்ணயிப்பதிலும் வங்கிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகின் முதல் வங்கி யாரால்? எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பல்வேறு வணிகர்களும் ஆட்சியாளர்களும் பாதுகாப்பு மற்றும் கடன் வசதிகளை நாடியபோதுதான் முதன்முதலில் வங்கிகள் நிறுவப்பட்டன. ஆனால், உலகின் மிகப் பழமையான வங்கி 550 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்பதையும், அது முகலாயர் காலத்திற்கும் முந்தையது என்பதையும், அனைத்திற்கும் மேலாக இன்றும் அது செயல்பட்டு வருகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்களா?
உலகளாவிய வங்கிச் செயல்பாடு எவ்வாறு தொடங்கியது?
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் வணிகர்கள், அரச குடும்பங்கள் மற்றும் திருச்சபைக்கு நிதிச் சேவைகளை வழங்கத் தொடங்கிய ஆரம்பகால வங்கி அமைப்புகள் மூலமாகவே இடைக்காலத்தில் உலகளாவிய வங்கிச் சேவை தொடங்கியது. காலப்போக்கில், வங்கிகள் பணத்தை வெளியிடவும், வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பணப் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கவும் தனது சேவைகளை விரிவுப்படுத்தின. பேரழிவை ஏற்படுத்திய போர்கள், பொருளாதார மந்தநிலைகள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகளைக் கடந்து இந்த வங்கிகள் நிலைத்து நின்றன; இவற்றில் மிகப் பழமையான வங்கிகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன.
உலகின் மிகவும் பழமையான வங்கி எது?
1472-இல் நிறுவப்பட்ட 'மவுண்ட் ஆஃப் பயட்டி' (mount of piety) எனும் அறக்கட்டளை அமைப்பிலிருந்து தனது வரலாற்றைத் தொடங்கும் இத்தாலிய வங்கியான 'பங்கா மான்டே டெய் பாஸ்கி டி சியெனா எஸ்.பி.ஏ.' (Banca Monte dei Paschi di Siena S.p.A.) - சுருக்கமாக BMPS-தான் உலகின் மிகப் பழமையான வங்கியாகும். BMPS தற்போது இருக்கும் வடிவில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது 1624-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் மூலம், இந்தியாவில் முகலாயப் பேரரசின் எழுச்சிக்கு முன்பே இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பழமையான வங்கியை நிறுவியவர் யார்?
உலகின் மிகவும் பழமையான வங்கி நிறுவனமான 'பங்கா மான்டே டீ பாஸ்கி டி சியெனா' (Banca Monte dei Paschi di Siena - BMPS), சியெனா குடியரசின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில், கியாரண்டி அல்லது சொத்துக்கள் அடிப்படையில், பின்தங்கிய நிலையில் உள்ள தனிநபர்களுக்கு நியாயமான மற்றும் தகுந்த நிபந்தனைகளின் கீழ் கடன் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டில், 'மெடியோபங்கா' (Mediobanca) வங்கியைத் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, BMPS இத்தாலியின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக மாறியது.
BMPS ஒரு பெரும் நிதி நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீண்டது?
யூரோஜோன் நெருக்கடியின் போது இத்தாலிய அரசு கடன் பத்திரங்களின் வருவாய் விகிதம் அதிகரித்ததாலும், சொத்துகளின் மதிப்பீடு சரிந்ததாலும், 2012-ஆம் ஆண்டின் முதல் பாதியில் BMPS வங்கி 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்தது. 8.3 பில்லியன் யூரோ மூலதன முதலீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டில் இத்தாலியின் பொருளாதாரம் மற்றும் நிதியமைச்சகம் இந்த வங்கியின் பெரும்பான்மைப் பங்குதாரராக மாறியது. அதே வேளையில், புத்தாக்கம், வளங்களின் திறமையான பயன்பாடு மற்றும் வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய புது செயல்முறையை வங்கி தொடங்கியது.
இந்த வங்கி யாருக்கு சொந்தமானது?
'பங்கா மான்டே டீ பாஸ்கி டி சியெனா' (Banca Monte dei Paschi di Siena) வங்கிக்கு ஒரே ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் மட்டுமே உரிமையாளராக இல்லை. இதன் உரிமை பல்வேறு பங்குதாரர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் இத்தாலிய நிதியமைச்சகம் 11.731% பங்குகளுடன் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. அதனைத் தொடர்ந்து 'குரூப்போ பிரான்செஸ்கோ கேடானோ கால்டஜிரோன்' (9.963%), 'டெல்ஃபின் SARL' (9.866%) மற்றும் 'பான்கோ பிபிஎம் SpA' (8.996%) ஆகியவை குறிப்பிடத்தக்க பங்குகளைக் கொண்டுள்ளன. பிற பங்குதாரர்கள் வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை (59.444%) கொண்டுள்ளனர். BMPS SpA ஒரு பொதுப் பங்குச் சந்தை நிறுவனம் ஆகும். இதன் தற்போதைய சந்தை மதிப்பு 28.44 பில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ. 3.14 லட்சம் கோடி) ஆகும்.



Click it and Unblock the Notifications
