For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவனுடன் தொடர்பில் இருந்த பெண்ணை, துவைத்த எடுத்து மனைவி - வைரல் வீடியோ!

ஒருசில சமயங்களில் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு செயல்படும் தவறு யாருடையது, யார் மேல் என்பதை மறந்து விடுவார்களா என்ன?

|

இங்கே அடித்து துவைக்கப்பட்டிருக்க வேண்டியவர் நபர் யார்? உண்மையில் அந்த மனைவி அவரது கணவரை தான் இந்நிலைக்கு ஆளாக்கி இருக்க வேண்டும்.

ஒருசில சமயங்களில் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு செயல்படும் தவறு யாருடையது, யார் மேல் என்பதை மறந்து விடுவார்களா என்ன?

இது சீனாவில் நடந்தேறிய கொடிய சம்பவம். தவறான முறையில் உறவில் இருப்பது தவறு தான். ஆனால், தவறு செய்து இருவருக்கும் அல்லவா தண்டனை வழங்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனா!

சீனா!

சீனாவில் ஆண்கள் அதிகம் கள்ளத் தொடர்பில் இருப்பது ஊரறிந்த விஷயம். இது ரகசியம் அல்ல என அந்த ஊரார்கள் கூறுகின்றனர். பல ஆண்கள் வெளிப்படையாகவே தங்களிடம் பணம் இருந்தால், இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அந்தஸ்து!

அந்தஸ்து!

நாம் முந்தைய தலைமுறையில் கண்ட ஒரு விஷயம். இன்றும் சீனாவில் தொடர்கிறது. ஒரிருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பது ஒரு அந்தஸ்தாக அங்கே காணப்படுகிறது.

வரிசையில் நிற்கும் பெண்கள்!

வரிசையில் நிற்கும் பெண்கள்!

செல்வந்தர்களிடம் கள்ளத் தொடர்பில் இருப்பதற்கு அங்கே பெண்கள் வரிசையில் நிற்கிறார்கள் என்றும் ஒருசில சீன இணையங்களில் தகவல் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஆண்கள் செய்யும் இந்த தவறுக்கு பெண்கள் தான் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள்.

போசுவா!

போசுவா!

போசுவா என்பது சீனாவில் இருக்கும் ஒரு நகரம். இது அன்ஹு மாகாணத்தை சேர்ந்துள்ளது. இங்கே சென்ற ஆண்டு நடந்த ஒரு சம்பவம் இப்போது மீண்டும் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

தன் கணவனுடன் தொடர்பில் இருந்த பெண்ணை கண்டுபிடித்து, தனது தோழிகளுடன் சென்று அந்த பெண்ணை வெட்டவெளியில் அசிங்கப்படுத்தி அடித்து கொடுமை செய்துள்ளனர்.

ஆடைகள் கிழிக்கப்பட்டு...

ஆடைகள் கிழிக்கப்பட்டு...

தவறு செய்த ஆணின் மனைவி அந்த பெண்ணை அடித்து கொடுமைப்படுத்த சுற்றி இருந்த பெண்கள் அவரை திட்டி கத்திக் கொண்டிருப்பது போல அந்த காட்சி பதிவாகியுள்ளது.

மக்கள் அந்த நிகழ்வை கடந்து செல்கின்றனர், கார்கள் கடந்து செல்கின்றன ஆனால், தடுக்க ஆளில்லை. உலகம் முழுக்க மக்கள் ஒரே மனநிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர் போல.

கத்தி ஓய்ந்த கூட்டம்!

கத்தி ஓய்ந்த கூட்டம்!

அந்த பெண்ணின் ஆடையை கிழித்து, அடித்து துன்புறுத்திய அந்த கூட்டம். ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் கத்திக் கொண்டே இருந்தது.

அந்த பெண்ணை இந்தளவிற்கு சித்திரவதை செய்வதை கண்டும் கானால் கூட்டம் வேடிக்கை மட்டுமே பார்த்தது. சிலர் இந்நிகழ்வை வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்தனர்.

எங்கே அந்த ஆண்?

எங்கே அந்த ஆண்?

தவறுக்கு முக்கிய காரணமாக அந்த ஆணின் நிழல் கூட அந்த வீடியோவில் இல்லை. தவறு செய்தவன் இன்று திருந்தி இருக்கலாம். அல்லது இன்றும் எங்கோ ஒரு நான்கு சுவற்றுக்குள் இத தவறை செய்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால், இந்த பெண்ணின் நிலை. வீடியோ பதிவு செய்தே ஓர் ஆண்டுகாலம் நிறைவடைந்து விட்டது. இந்த இன்டர்நெட் யுகத்தில் மீண்டும், மீண்டும் வைரலாகி மனதை கொல்லும் வைரஸாக பரவிக் கொண்டிருக்கிறது.

வைரல் வீடியோ!

அந்த பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ.

All Image Source: Youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Wife Beats Up Her Husbands Alleged Mistress in Public: Viral Video!

Wife Beats Up Her Husbands Alleged Mistress in Public: Viral Video!
Desktop Bottom Promotion