Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 17 முதல் சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களை சோதிக்க போகிறார்! ரெடியா இருங்க -
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்! -
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப நடிகை வைஷ்ணவியின் ஃபேஸ் பேக்கை போடுங்க! -
மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.! -
பலரும் அறியாத இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்.! -
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: குபேரன் அருளால் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறுமாம்
டாக்டர் அம்பேத்கர் பற்றி நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள்!
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில்1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டவர். இவர் இந்தியாவிலேயே உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். இவர் சட்டம், அரசியல், வரலாறு, தத்துவம் போன்ற துறைகளில் கைத்தேர்ந்தவர்.
இவர் சிறந்த ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், புரட்சியாளராகவும் விளங்கியவர். இவை அனைத்திற்கும் மேலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையும் குழுவின் தலைவராக இருந்தவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிய பெரிதும் போராடியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்கு பெயர் போன டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல் #1
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரான டாக்டர் அம்பேத்கர், அவரது பெற்றோருக்கு 14 ஆவது குழந்தையாவார்.

தகவல் #2
டாக்டர் அம்பேத்கரின் முன்னோர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் நீண்ட காலம் வேலை பார்த்து வந்தனர்.

தகவல் #3
அம்பேத்கரின் உண்மையான பெயர் அம்பேவாதேகர் ஆகும். ஆனால் இவரது ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர், இவரைப் பிடிக்கும் என்பதால் இவரது பெயரைப் பள்ளி பதிவுகளில் அம்பேத்கர் என்று மாற்றிவிட்டார்.

தகவல் #4
டாக்டர் அம்பேத்கர் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் 2 வருடங்கள் கல்லூரி முதல்வராக இருந்தார்.

தகவல் #5
அம்பேத்கர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ கடுமையாக எதிர்த்தவர்.

தகவல் #6
இந்தியாவிலேயே வெளிநாட்டில் பொருளியல் முனைவர் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.

தகவல் #7
டாக்டர் அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டில் இருந்து கடுமையான நீரிழிவு நோயால் பல அவஸ்தைகளை அனுபவித்து, 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது உயிரைத் துறந்தார்.



Click it and Unblock the Notifications











