Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
டாக்டர் அம்பேத்கர் பற்றி நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள்!
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில்1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டவர். இவர் இந்தியாவிலேயே உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். இவர் சட்டம், அரசியல், வரலாறு, தத்துவம் போன்ற துறைகளில் கைத்தேர்ந்தவர்.
இவர் சிறந்த ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், புரட்சியாளராகவும் விளங்கியவர். இவை அனைத்திற்கும் மேலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையும் குழுவின் தலைவராக இருந்தவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிய பெரிதும் போராடியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்கு பெயர் போன டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல் #1
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரான டாக்டர் அம்பேத்கர், அவரது பெற்றோருக்கு 14 ஆவது குழந்தையாவார்.

தகவல் #2
டாக்டர் அம்பேத்கரின் முன்னோர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் நீண்ட காலம் வேலை பார்த்து வந்தனர்.

தகவல் #3
அம்பேத்கரின் உண்மையான பெயர் அம்பேவாதேகர் ஆகும். ஆனால் இவரது ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர், இவரைப் பிடிக்கும் என்பதால் இவரது பெயரைப் பள்ளி பதிவுகளில் அம்பேத்கர் என்று மாற்றிவிட்டார்.

தகவல் #4
டாக்டர் அம்பேத்கர் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் 2 வருடங்கள் கல்லூரி முதல்வராக இருந்தார்.

தகவல் #5
அம்பேத்கர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ கடுமையாக எதிர்த்தவர்.

தகவல் #6
இந்தியாவிலேயே வெளிநாட்டில் பொருளியல் முனைவர் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.

தகவல் #7
டாக்டர் அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டில் இருந்து கடுமையான நீரிழிவு நோயால் பல அவஸ்தைகளை அனுபவித்து, 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது உயிரைத் துறந்தார்.



Click it and Unblock the Notifications