Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
டாக்டர் அம்பேத்கர் பற்றி நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள்!
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில்1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டவர். இவர் இந்தியாவிலேயே உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். இவர் சட்டம், அரசியல், வரலாறு, தத்துவம் போன்ற துறைகளில் கைத்தேர்ந்தவர்.
இவர் சிறந்த ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், புரட்சியாளராகவும் விளங்கியவர். இவை அனைத்திற்கும் மேலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையும் குழுவின் தலைவராக இருந்தவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிய பெரிதும் போராடியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்கு பெயர் போன டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல் #1
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரான டாக்டர் அம்பேத்கர், அவரது பெற்றோருக்கு 14 ஆவது குழந்தையாவார்.

தகவல் #2
டாக்டர் அம்பேத்கரின் முன்னோர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் நீண்ட காலம் வேலை பார்த்து வந்தனர்.

தகவல் #3
அம்பேத்கரின் உண்மையான பெயர் அம்பேவாதேகர் ஆகும். ஆனால் இவரது ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர், இவரைப் பிடிக்கும் என்பதால் இவரது பெயரைப் பள்ளி பதிவுகளில் அம்பேத்கர் என்று மாற்றிவிட்டார்.

தகவல் #4
டாக்டர் அம்பேத்கர் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் 2 வருடங்கள் கல்லூரி முதல்வராக இருந்தார்.

தகவல் #5
அம்பேத்கர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ கடுமையாக எதிர்த்தவர்.

தகவல் #6
இந்தியாவிலேயே வெளிநாட்டில் பொருளியல் முனைவர் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.

தகவல் #7
டாக்டர் அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டில் இருந்து கடுமையான நீரிழிவு நோயால் பல அவஸ்தைகளை அனுபவித்து, 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது உயிரைத் துறந்தார்.



Click it and Unblock the Notifications