Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்!
ஏன் உணவு சாப்பிடும்போது தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?
உணவு சாப்பிடும்போது ஏன் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
தரையில் உட்கார்ந்து உணவருந்தும் பழக்கம் பாரம்பரியமாக இந்தியர்களிடையே பின்பற்றப்பட்டு வருகிறது. நீங்கள் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் கவனித்தால் அவர்கள் தரையில் உட்கார்ந்தே தங்கள் உணவுகளை உண்டனர்.
ஏன் இப்படி சாப்பிட வேண்டும் என்பதை கவனித்தால் இதற்கு பின்னாடி பலன் தரும் நிறைய ஆச்சரியமூட்டும் தகவல்கள் உள்ளன.
அந்த சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை இங்கே தொகுத்து வழங்க உள்ளது.

யோகா
இந்தியர்கள் தரையில் உட்கார்ந்து உணவருந்தும் போது கால்களை குறுக்காக போட்டு அமர்ந்து சாப்பிடுவார்கள். இந்த அமைப்பு ஒரு யோகா நிலை. ஆமாங்க இதற்கு பெயர் சுக்ஹாசனம் ஆகும்.
இந்த சுக்ஹாசனம் அமைப்பு தான் நாம் யோகா நிலையில் இருக்கும் போது மனதிற்கு அமைதியை தருகிறது. இந்த அமைப்பு நமது தண்டுவடத்தின் கீழ் பகுதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி மெதுவான சுவாசம், தசைகளின் விரிவாக்கத்தை குறைத்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், சீரண செயல்களை துரிதபடுத்துதல் போன்ற வேலைகளை செய்கிறது.

இயற்கையாக உங்கள் உடலமைப்பை மெறுகேற்றுதல் :
நாம் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது நமது உடல் அமைப்பு சரியான நிலையில் அமைகிறது. நமது தோள்பட்டை உயர்த்தப்பட்டு முதுகுத் தண்டுவடம் நேராக அமைகிறது. இது நமது உடல் அமைப்பை சரியான நிலையில் வைக்க உதவுகிறது.

சீரண சக்தி அதிகரித்தல்
தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது உணவை உட்பகொள்ளு ம் போது குனிந்து சாப்பிடுவதும் பிறகு நேராக அமர்வதும் சீரண மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இந்த முன் மற்றும் பின்னோக்கிய நகர்வு சீரண சுரப்பியை அதிகரித்து நமது சீரணிக்கும் வேலையை துரிதமாக்குகிறது.

உடல் எடை குறைதல்
ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது உணவின் மீதுள்ள நமது எண்ணத்தை மூளையில் ஒருமுகப்படுத்துகிறது. ஹார்வர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது வயிற்றுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்புகளின் சிக்னல்கள் சரியாக கடத்தப்பட்டு வயிறானது நிரம்பியதும் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால் அதிகமாக உணவருந்துவது தடுக்கப்பட்டு உடல் எடை யானது கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது.

முதுகு மற்றும் இடுப்பு வலிமையாக, நெகிழ்வுத்தன்மையுடன் இருத்தல்
தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது முதுகுத் தசைகள், இடுப்பு, மற்றும் கோர் தசைகள் எல்லாம் நீட்சியடைகின்றன. இந்த தொடர்ச்சியான நீட்சிகள், மூட்டுகளை மடக்கி உட்கார்ந்தல், இடுப்பு ஜாயிண்ட்கள் எல்லாம் நமது இடுப்பை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. இது முதுகு வலி, மூட்டு வலி போன்றவற்றை குறைக்கிறது



Click it and Unblock the Notifications