Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இரத்தத்தை சுத்தம் செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள்!
உடலுறுப்புக்களின் சீரான இயக்கத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குவது இரத்தம் தான். இத்தகைய இரத்தம் நாம் தற்போது உட்கொண்டு வரும் ஜங்க் உணவுகளால் அசுத்தமாக உள்ளது. இதன் காரணமாக உடலுறுப்புக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகக்கூடும்.
எனவே ஒவ்வொருவரும் தினமும் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து சாப்பிட்டு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கீரைகள்
கீரைகள் இரத்தத்தையும், கல்லீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே அடிக்கடி கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பசலைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவையும் உள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் என்னும் கீரையும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தின் தரத்தை அதிகரிக்கும். மேலும் அஸ்பாரகஸை அடிக்கடி உட்கொடு வந்தால், இரத்த நாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

மாதுளை
மாதுளை இதய நோயாளிகளுக்கு நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் அது இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, இரத்த நாளங்களுக்கு பாதுகாப்பை வழங்கி, இரத்த நாளம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புதிய செல்களின் வளர்ச்சியைத் தூண்டி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே பெர்ரிப் பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.

மஞ்சள் தூள்
மஞ்சளில் உள்ள குர்குமின், தமனிகளின் சுவர்களில் உள்ள அழற்சி மற்றும் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கும். மேலும் உணவில் மஞ்சள் சேர்ப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, இரத்தம் சுத்தமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications