Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
குழந்தை பிறந்து 12 மாதம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும்?
இங்கு குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து, 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. பெரும்பாலான தம்பதிகள் தனிக்குடித்தனம் தான் இருக்கிறார்கள். இதனால் முதல் முறையாக தாயாகி இருக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து, 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க யாருக்கும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

அப்படி தனியாக இருக்கும் தம்பதிகளுக்கு, இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது தான். ஆனால் குழந்தைகள் வளர வளர அந்த தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. எனவே எப்போது திட உணவுகளைக் கொடுக்க வேண்டும், எப்போது ஜூஸ் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக குழந்தைக்கு எந்த ஒரு உணவைக் கொடுப்பதற்கு முன்னும், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை இல்லாமல் எதுவும் கொடுக்கக்கூடாது.

மாதம் 1
முதல் மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக்கூடாது. முக்கியமாக முதல் மாதத்தில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

மாதம் 2
குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் ஒரு நாளைக்கு 7-8 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

மாதம் 3
மூன்றாவது மாதத்திலும் தாய்ப்பால் மட்டும் போதுமானது. இந்த மாதத்தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

மாதம் 4
குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் பழச்சாறுகளைக் கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸை குழந்தைக்கு கொடுப்பது நல்லது. முக்கியமாக ஏதாவது ஒரு ஜூஸைத் தான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அதுவும் வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.

மாதம் 5
ஐந்தாவது மாதத்தில் மருத்துவரை சந்தித்து, குழந்தைக்கு மெதுவாக திட உணவுகளைக் கொடுக்கலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். கொடுக்கலாம் என்று மருத்துவர் கூறினால், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை அரைத்து, வேண்டுமானால் சிறிது தாய்ப்பால் சேர்த்து கலந்து குழந்தைக்கு சிறிது கொடுக்கலாம். பழங்களைக் கொடுக்க நினைத்தால், அந்த பழத்தை நன்கு அரைத்து பின் கொடுங்கள்.

மாதம் 6
உங்கள் குழந்தை ஒருசில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் குழந்தைக்கு கொடுக்காதீர்கள். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை அரைத்தும் கொடுக்கலாம்.

மாதம் 7
குழந்தை பிறந்து ஏழு மாதம் ஆகிவிட்டால், நன்கு பேஸ்ட் செய்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம். குழந்தைக்கு எது கொடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

மாதம் 8-9
குழந்தை பிறந்து 8-9 மாதம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இதுவரை கொடுத்த உணவின் அளவை விட, சற்று அதிகமாகவே உணவுகளை கொடுக்கலாம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கண்ட உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி கொடுத்துவிடாதீர்கள். குறிப்பாக சாக்லேட், ஜூஸ், சிப்ஸ், கேக் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மாதம் 10-12
இந்த மாத குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையுமே கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications