Just In
- 24 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 2 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- News ஏசி ஓடுதா? மேட்ச் நடக்குதா? 18ம் தேதி என்னாச்சு? சூப்பர் சர்ப்ரைஸ் தந்த தமிழக மின்வாரியம்..மகிழ்ச்சி
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
என் படத்துக்காக ஒரு ஆளையே கொல்லலாமா? விளாசித் தள்ளிய தளபதி விஜய்
தளபதி 63 பட ஷூட்டிங்கின் போது நடந்த விபரீதமான விஷயத்துக்கு விஜய் என்ன முடித்தார் என்பது பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.
தளபதி 63 படத்தின் ஷூட்டிங் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் படம் தான் தளபதி 63.
அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் தொழில்நுட்ப பிரிவில் (லைட்மேன்) வேலை செய்கின்ற ஒருவருக்கு விபத்து நேர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதுகுறித்து விஜய் பேசிய விஷயம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
தளபதி 63 சூட்டிங்
தளபதி 63 சூட்டிங் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்குகள் அதிகம் சென்னையிலேயே ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு எடுத்து முடிக்கப்படும். பாடல் காட்சிகள் போன்ற சில தவிர்க்க முடியாத சீன்களுக்கு மட்டுமே வெளிநாடுகளில் ஷூட்டிங் செய்வார்கள். ஏனென்றால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நிகழ்த்துவதை விட சென்னையில் நடத்தினால் திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். அது அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற நல்ல எண்ணத்துக்காகவே விஜய் இந்த முடிவுக்கு வந்து தொடர்ந்து அதை பின்பற்றியும் வருகிறார்.
MOST
READ:
நியூமராலஜியில்
நெம்பர்
4
க்கு
இருக்கிற
பவர்
தெரியுமா?
தெரிஞ்சிக்கங்க...
எதிர்பாராத விபத்து
அந்நிலையில் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சன்ரைஸ் சட்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் கிரெயின் கொண்டு மிக உயரமாகக் கட்டப்பட்ட ஃபோகஸ் லைட் கீழே நின்று கொண்டிருந்த செல்வராஜ் என்பவரின் மீது இந்த லைட் விழுந்து விட்டது.
உயிருக்கு ஆபத்து
அவருக்கு மிக உயரத்தில் இருந்து லைட் தலையில் விழுந்ததால் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய் வருகை
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனடியாக விரைந்து மருத்துவமனைக்குச் சென்ற விஜய், மருத்துவர்களிடமும் அவருடைய உறவினர்களிடமும் விசாரித்தார்.
MOST
READ:
எந்தெந்த
ராசிக்காரர்கள்
குருபகவானை
கட்டாயம்
வழிபட
வேண்டும்?
உதவும் மனம்
கண்களில் கண்ணீர் வழிய அழுதேவிட்டார் விஜய். என்ன மாதிரியான உதவியாக இருந்தாலும் தயக்கமே இல்லாமல் என்னிடம் கேளுங்கள், யோசிக்கவே வேண்டாம் என்று சொன்னதோட தன்னுடைய பர்சனல் போன் நம்பரையும் கொடுத்துச் சென்றிருக்கிறார்.
விசாரணை
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக அந்த படத்தின் புரடக்ஷன் மேனேஜரை அழைத்து விசாரித்திருக்கிறார். சன்ரைஸ் கால்சீட்டில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதனால் அதிகாலையில் 5 மணியில் 10 வரையிலும் இருந்து மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை படப்படிப்பு நடக்கிறது. காலையில் நடக்கும் காட்சிகள் காலையிலேயே எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாலை வெயிலில் அதற்கேற்ப மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் வேலையாட்கள் அவசரப்படுத்தப்படுகிறார்கள்.
விஜய்யின் உத்தரவு
இந்த வேகப்படுத்துதல் தான் உயிரையே எடுக்கும் நிலைக்குக் கொண்டு போய் விட்டிருக்கிறது. அன்று மாலை ஷூட்டிங் தொடங்கியதுமே யாரும் அவசர அவசரமாக வேலை செய்ய வேண்டாம் என்றும் என்னுடைய ஒரு நாள் கால்ஷீட் என்பது ஒருவருடைய உயிர் கிடையாது. ஒருநாள் ஷூட்டிங் தள்ளிப்போவதால் ஏதும் நடந்துவிடாது. உயிர்தான் முக்கியம். இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் என்னுடைய எந்த படத்திலும் நடக்கக்கூடாது. தொழிலாளர்களுடைய நலன் தான் முக்கியம் என்று புரொடக்ஷன் டீமை விளாசித் தள்ளிவிட்டாராம் விஜய்.
MOST READ: அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்?
நெகிழ்ச்சியான சம்பவம்
இதைக் கேட்ட அங்கிருந்தம அத்தனை தொழிலாளர்களும் புரொடக்ஷன் டீமும், மருத்துவமனையில் இருக்கும் செல்வராஜின் குடும்பத்தினரும் விஜய்யின் இந்த இளகிய மனமும் அன்பும் அக்கறையையும் நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறார்களாம். டைரக்டர் தான் கொஞ்சம் அப்சட்னு சொல்லிக்கிறாங்க.