Latest Updates
-
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ!
ஒரு ஆசிரியர் மாணவனை எப்படி அணுக வேண்டும்.? Dr.ராதாகிருஷ்ணனின் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் !!
இந்தியா முழுவதும் செப்டம்பர் ஐந்தாம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது, இந்நாளில் அவரைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர்களின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் ராதகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி என்றாலும் எப்போதுமே ஆசிரியர் என்னும் பணியையே விரும்பிடும் டாக்டர் சர்வப் பள்ளி ராதகிருஷ்ணன் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்

ஆங்கிலம் கற்க அனுமதியில்லை :
சாதரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த ராதகிருஷ்ணனை மதம் சார்ந்த விஷயங்களை அதில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்றே விரும்பினார் அவரது தந்தை. அதற்காக ராதாகிருஷ்ணனை ஆங்கில கற்க கூட சம்மதிக்கவில்லை.

கடவுள் சுட்ட ரொட்டி :
நிறவெறிப்பிரச்சனை அதிகமாக நடந்த அந்த காலத்தில் ஒரு அழகான விளக்கத்தை கொடுத்தார். கடவுள் ரொட்டி சுட்டார் ஆரம்பவத்தில் பக்குவம் தெரியாததால் கருகவிட்டுவிட்டார். அவர்கள் தான் ஆப்பிரிக்காவில் இருக்கும் கறுப்பர்கள்.
அடுத்த ரொட்டியை கருகவிடக்கூடாது என்று வேகமாக எடுத்துவிடுகிறார் அவர்கள் தான் வெள்ளையர்கள். இரண்டு அனுபவத்திற்கு பிறகு சரியான பக்குவத்துடன் எடுத்துவர்கள் தான் இந்தியர்கள் என்றார்.

ஒரே இந்தியர் :
சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா விருதுக்கு முதன் முதலாக தேர்வு செய்யப்பட்டவர். உலகப் பல்கலைக்கழகங்களில் 17 டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் ராதாகிருஷ்ணன் தான்.

ஊருக்குப் பெருமை :
ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராக, அயல்நாட்டு தூதுவராக, குடியரசுத் துணைத் தலைவராக, குடியரசுத் தலைவராக உயர் பதவிகள் பல வகித்து, அந்தப் பதவிகளுக்கு கெளரவம் ஏற்படும் வகையில் வாழ்ந்து காட்டியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
எல்லா இடங்களிலும் தான் பிறந்த ஊரான திருத்தணி அருகே இருக்கும் ‘சர்வப்பள்ளி' என்ற கிராமத்தின் பெயரை தன் பெயரோடு சேர்த்துக் கொண்டு சிறப்பு செய்தார்.

மாணவர்கள் குதிரையாய் :
ஒருமுறை டாக்டர் ராதாகிருஷ்ணன் மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து கல்கத்தா பல்கலைக் கழகத்துக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிலை. இச்செய்தி மைசூர் பல்கலைக் கழக மாணவர்களுக்கு பெருத்த வேதனையை அளித்தது.
பல்கலைக்கழக வளாகத் திலிருந்து ரெயில் நிலையத்திற்கு குதிரை வண்டியில் புறப்பட தயாரானார் ராதாகிருஷ்ணன். ஆனால், மாணவர்கள் அன்பின் மிகுதியால் வண்டியில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு தாங்களே வண்டியை இழுத்துச் சென்றனர்.

பால் சைவமா? அசைவமா? :
தமிழ்நாட்டில் முதன் முதலாக காந்திஜியை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, பசுவின் ரத்தத்திலிருந்து உற்பத்தியாவது தானே பால். அது இறைச்சிக்கு சமானம் என்றார் காந்தி. உடனே ராதாகிருஷ்ணன், தாயின் பாலை உண்டு வளரும் மனிதன். அவள் ரத்தத்தின் சத்தான பாலை, அதாவது மனித இறைச்சியின் சாரத்தைத்தானே குடித்து வளர்கிறான். அப்படியானால் மனிதனாக பிறந்த யாருமே சைவ உணவு சாப்பிடுபவர்கள் இல்லை என்றார்.

அரக்கனையும் அரவணைத்த ஆசிரியர் :
1950ல் இந்திய அரசு ராதாகிருஷ்ணனை ரஷ்யாவின் அரசாங்கத் தூதுவராக நியமித்தது. அப்போது ரஷ்யாவில் ஸ்டாலின் அதிபராக இருந்தார். ரஷ்யாவின் தூதர் பணி முடிந்து இந்தியா திரும்புகையில் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது நோயுற்றிருந்த ஸ்டாலினை அருகில் சென்று ஆரத்தழுவிக் கொண்டார்.
ராதாகிருஷ்ணனின் இந்த அன்பினால் மெய்சிலிர்த்த ஸ்டாலின் ,மற்றவர்களைப் போல் என்னை அரக்கன் என்று நினைக்காமல் மனிதனாக என்னை அணுகிய முதல் நபர் நீங்கள் தான் என்று பாராட்டினார்.

தத்துவ துறைக்கு மரியாதை :
ராதாகிருஷ்ணன் இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றபோது உலகின் மிகச்சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவராக விளங்கிய பெர்ட்ரண்ட் ரஸ்சல் என்பவர், இந்தியாவின் ராதாகிருஷ்ணனை ஜனாதிபதி ஆக்கியிருப்பது தத்துவ துறைக்கே செய்யப்பட்ட மரியாதை என்று புகழாரம் சூட்டினார்.



Click it and Unblock the Notifications