Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி
Chettinad Ukkarai Recipe in Tamil: தமிழர்களின் உணவுகளுக்கென்று நீண்ட பாரம்பரியமும், வரலாறும் உள்ளது. தமிழ்நாட்டின் சில ஊர்கள் அவற்றின் தனித்துவமான உணவுகளுக்காக புகழ்பெற்றவையாக இருக்கும். அந்த வகையில் செட்டிநாடு உணவுகளுக்கென்று உலகம் முழுவதும் நற்பெயர் உள்ளது. பொதுவாக செட்டிநாடு உணவுகள் என்றாலே காரசாரமான அசைவ உணவுகள் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் செட்டிநாடு உணவுகளில் பல தனித்துவமான இனிப்புகளும் உள்ளன.
செட்டிநாடு இனிப்புகளில் உக்கரை என்ற ஸ்பெஷல் இனிப்பு உள்ளது. இதைப்பற்றி அவ்வளவாக நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஏனெனில் இது எந்த உணவகங்களிலும் கிடைக்காது. இதை நாம் வீட்டில்தான் செய்து சாப்பிட வேண்டும். பாதி சர்க்கரைப் பொங்கல், பாதி கேசரி போல இருக்கும் இந்த இனிப்பு அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். ஒருமுறை இந்த இனிப்பை செய்துவிட்டால் அடிக்கடி இதை நீங்களே செய்வீர்கள். தமிழர் பாரம்பரிய இனிப்புகளில் ஒன்றான இதை நிச்சயம் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். பிரபல சமையல் கலை நிபுணரான தீனா இத உக்கரை ரெசிபியை பகிர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு செட்டிநாடு உக்கரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உக்கரையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ¼ கப் பாசிப்பருப்பு
- 2 ஸ்பூன் ரவை
- 2 ஸ்பூன் அரிசி மாவு
- 1 மூடி துருவிய தேங்காய்
- அரை ஸ்பூன் ஏலக்காய் தூள்
- ஒரு சிட்டிகை உப்பு
- 10 உடைத்த முந்திரி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 4 ஸ்பூன் நெய்
- தேவையான அளவு தண்ணீர்
வெல்லப்பாகு செய்ய:
- அரை கப் பொடித்த வெல்லம்
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து, வெல்லம் முழுமையாகக் கரையும் வரை விடவும். பின்னர் அதை எடுத்துத் தனியே வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சூடாக்கி, உடைத்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் பாசிப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பருப்பு நன்றாக வேகும் வரை கொதிக்க வைக்கவும். பருப்பு முழுமையாகத் தெரிந்தாலும், எளிதில் மசியக்கூடிய பதம் வரும்வரை வேகவிடவும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, தனியாக வைக்கவும். தண்ணீர் மிச்சமிருந்தால் அதை அதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி, ரவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். பின்னர் அரிசி மாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து, ஒரு நிமிடம் வறுக்கவும். பின்னர், சமைத்த பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும்; பிறகு, மாவும் ரவையும் வேகும் வகையில் ½ கப் தண்ணீர் சேர்க்கவும், பருப்பு வேகவைத்த தண்ணீர் இருந்தால் அதை சேர்த்து வேக வைக்கவும்.
- கலவை கெட்டியாகும் வரை வேக வைக்கவும். பின்னர் வெல்லப் பாகைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- கலவை ஒன்றுதிரண்டு வரும் வரை நன்றாக கிளறவும். இப்போது ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் வறுத்த முந்திரிப் பருப்புகளைச் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான செட்டிநாடு உக்கரை தயார்.



Click it and Unblock the Notifications