Latest Updates
-
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்!
அடை தோசையும், கத்திரிக்காய் சட்னியும் எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க!
Adai Dosa With Kathirikai Chutney Recipe In Tamil: காலையில் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? வீட்டில் தோசை மாவும் இல்லையா? அப்படியானால் அடை தோசை செய்யுங்கள். இந்த அடை தோசையானது நிறைய பருப்புக்களை சேர்த்து செய்வதால், சுவையானது மட்டுமின்றி சத்தானதும் கூட.
இந்த தோசைக்கு சைடு டிஷ் டிஷ்ஷாக கத்திரிக்காய் சட்னி பிரமாதமாக இருக்கும். இந்த டிபனை ஒருமுறை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் வாரம் ஒருமுறை கட்டாயம் செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

இந்த அடை தோசை மற்றும் கத்திரிக்காய் சட்னி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த அடை தோசை மற்றும் கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அடை தோசைக்கு...
* பாசிப்பருப்பு - 1 கப்
* பச்சரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* மசூர் பருப்பு - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 சிறிய பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2
* பூண்டு - 4 பல்
* கத்திரிக்காய் - 150 கிராம்
* தக்காளி - 2
* புளி - சிறிய துண்டு
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, பச்சரிசி, துவரம்
பருப்பு, மசூர் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை
எடுத்து, நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி, 3 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருப்புக்களை சேர்த்து, அத்துடன்
பூண்டு, இஞ்சி, சீரகம், வரமிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து,
வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிய துண்டு புளியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போக வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கியதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
கத்திரிக்காய் சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக வார்த்து, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான அடை தோசை தயார்.



Click it and Unblock the Notifications