40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?

இந்தியா பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த ஒரு தனித்துவமான நாடாகும். நம் நாட்டில் இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளது, அதில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அதில் வெகுசில கோவில்கள் நம்பமுடியாத அதிசயங்களை தன்னுள் கொண்டு பல நூற்றாண்டுகளாக கம்பீரமாக நிற்கின்றன.

Bizarre Indian Temple That Built With 40 000 kg of Ghee

ராஜஸ்தானின் பாலைவன நகரமான பிகானேரில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகத் தண்ணீர் துளியும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க வெண்ணெயைக் கொண்டு கட்டப்பட்ட 550 ஆண்டுகள் பழமையான ஒரு கோயில் உள்ளது என்று சொன்னால் நீங்கள் அதை நம்புவீர்களா? இது 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமணக் கோவிலாகும். இந்தியாவின் மிகச்சிறந்த கட்டடக்கலை அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த கோவில் எங்கு உள்ளது?

இது ராஜஸ்தானில் இருக்கும் 'பண்டசார்' சமணக் கோயிலாகும். இக்கோயிலைக் கட்டுவதற்கான கலவையைத் தயாரிக்கும்போது, ​​தண்ணீருக்குப் பதிலாக சுமார் 40,000 கிலோ தூய நெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த கோவிலில் இதைவிட வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கோடைக்காலத்தின் மிக வெப்பமான நாட்களில் இந்தக் கோவிலின் தரைப்பகுதிகளில் இருந்து நெய் கசிந்து வருவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். வரலாறு, பொறியியல் அல்லது நாட்டுப்புறக் கதை என எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இக்கோயில் ராஜஸ்தானின் மிகச்சிறந்த கலாச்சாரச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவின் இந்தத் தனித்துவமான கோவிலைப் பற்றியும், அதன் பின்னணியில் உள்ள வியக்கத்தக்க கதையைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பண்டசார் சமணக் கோவில்

பண்டசார் சமணக் கோவில், சமண மதத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பண்டசா ஓஸ்வால் என்பவரின் ஆதரவின் கீழ் 1468-ஆம் ஆண்டில் இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்களும் சமண மரபுகளும் தெரிவிக்கின்றன. இவர் பிகானேரைச் சேர்ந்த ஒரு பணக்கார சமண வணிகர் ஆவார். அந்தக் காலகட்டத்தில் ராஜஸ்தானின் இப்பகுதி கடுமையான வறட்சியாலும், தண்ணீர் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தது. இங்கு நிலவும் நாட்டுப்புறக் கதைகளின் படி, அவர் முன்னாள் சிந்திய ஒரு துளி நெய்யை மிகவும் கவனமாகச் சேகரித்து வைத்ததற்காக பண்டசா கேலிக்குள்ளானார். தனது செயல் பேராசையினால் தூண்டப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பண்டசா ஒரு வியக்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டார். கோவிலைக் கட்டுவதற்குத் தேவையான கலவையைத் தயாரிக்க தண்ணீருக்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.

எப்போது கட்டப்பட்டது?

உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, கட்டுமானத்தின் போது சுண்ணாம்பு கலவையில் சுமார் 40,000 கிலோ தூய நெய் கலக்கப்பட்டது. வரலாற்றாசிரியர்கள் இதனை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகக் கருதாமல், கோவிலின் நீண்டகால வாய்மொழி மரபின் ஒரு பகுதியாகவேக் கருதுகின்றனர். இருப்பினும், இக்கதை பல தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு, இன்று இக்கோயிலின் அடையாளமாகவே மாறிவிட்டது. பண்டசார் 1514-இல் காலமானார், ஆனால் கட்டுமானப் பணிகள் அவர் இறந்தும் பல தசாப்தங்களாகத் தொடர்ந்தன.

இறுதியாக 1554-ஆம் ஆண்டளவில், அதாவது சுமார் 86 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. வெப்பநிலை 45°C-க்கு மேல் உயரும்போது, ​​பழமையான கல் தரையின் சில பகுதிகளில் சிறிய எண்ணெய் பசையுள்ள தடயங்கள் தோன்றுவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பல பக்தர்கள் இதனை அந்த நெய்யின் எஞ்சிய பகுதியாகக் கருதுகின்றனர். இருப்பினும், இதனை உறுதிப்படுத்தும் உறுதியான அறிவியல் ஆய்வு எதுவும் இல்லை. அதற்கான விளக்கம் எதுவாக இருந்தாலும், இக்கதை இலட்விலை பிகானேரின் அதிகம் பேசப்படும் பாரம்பரியத் தலங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இது ராஜஸ்தானியக் கைவினைத்திறனின் ஒரு சிறந்த படைப்பாகும்.

பண்டசார் சமணக் கோவிலின் கட்டுமானம்

இந்தக் கோவில் முக்கியமாகச் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடக்கலை அதிசயமாகும். மூன்று தளங்களைக் கொண்ட இக்கட்டிடம், நேர்த்தியான சமணக் கலைநயம் மற்றும் பாரம்பரிய ராஜஸ்தானியக் கைவினைத்திறனின் அடையாளமாக நிற்கிறது. நுணுக்கமான சுவரோவியங்கள், மேற்கூரைகளில் தங்கத் தகடு ஓவியங்கள் மற்றும் நேர்த்தியான கண்ணாடி வேலைப்பாடுகள் ஆகியவை இக்கோவிலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும். மேலும், 24 சமணத் தீர்த்தங்கரர்களையும் சித்தரிக்கும் சிற்பங்கள் இங்கு இருப்பது இதன் மற்றொரு அழகிய அம்சமாகும்.

Story first published: Sunday, July 26, 2026, 9:25 [IST]
Desktop Bottom Promotion