இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க

இந்தியாவின் மிகவும் உயரிய பதவி எதுவென்று கேட்டால் பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் IAS பதவிதான் என்று கூறுவார்கள். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்தாலும் இந்தியாவின் நிர்வாகம் குடிமைப்பணி அதிகாரிகளான IAS அதிகாரிகளிடம்தான் உள்ளது.

Who Is India s First IAS Officer

இந்தியாவில் தற்போது 5,755 IAS அதிகாரிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் இதற்காக தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் இந்தியாவின் முதல் IAS அதிகாரி யாரென்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? அதற்கானப் பதிலை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் முதல் IAS அதிகாரி

1864-ஆம் ஆண்டில் இந்தியக் குடிமைப் பணியில் இணைந்த சத்யேந்திரநாத் தாகூர், இந்தியாவின் முதல் IAS அதிகாரியாகக் கருதப்படுகிறார். மகரிஷி தேபேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவி ஆகியோரின் மகனான இவரது சாதனை, பல இந்தியர்களை ICS தேர்வை எழுதத் தூண்டியது. ஒரு IAS அதிகாரியாக அவரது பணி பொதுச் சேவையை மட்டுமல்லாமல், சமூக நலனையும் உள்ளடக்கியதாக இருந்தது. இந்தியாவின் முதல் IAS அதிகாரியாக மாற சத்யேந்திரநாத் தாகூர் மேற்கொண்ட பயணம், வருங்காலத் தலைமுறையினருக்கு இந்த பணியில் இணைய வழிவகுத்தது மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் பொது நிர்வாகத்தின் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் குடிமைப் பணி வரலாற்றின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. சத்யேந்திரநாத் தாகூர் ஒரு நிர்வாகியாக மட்டுமல்லாமல், பன்முகத் திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார். எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கினார்.

ஆரம்பகால வாழ்க்கை

1842-ல் கொல்கத்தாவின் புகழ்பெற்ற தாகூர் குடும்பத்தில் பிறந்த சத்யேந்திரநாத், நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார். அவரது தந்தையான தேபேந்திரநாத் தாகூர், சீர்திருத்தவாத இந்து இயக்கமான 'பிரம்ம சமாஜத்தில்' முக்கியப் பங்காற்றினார். இந்த இயக்கம் சத்யேந்திரநாத்தின் சமூக உணர்வை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.

கல்வி

சத்யேந்திரநாத் தனது ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பயின்றார். தனது ஆரம்பக் கல்வியில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளைக் கற்றுக்கொண்டார். 1857-ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை எழுதிய முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், பின்னர் பிரசிடென்சி கல்லூரியில் பயின்றார்.

IAS தேர்வில் வெற்றி

அதுவரை ஆங்கிலேயர்கள் மட்டுமே நிர்வாகப் பணிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில்,1850-களில் இந்தியர்களுக்கும் இந்தியக் குடிமைப் பணி (ICS) தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், சத்யேந்திரநாத் 1862-ல் இங்கிலாந்து சென்று இந்த தேர்வை எழுதினார். 1863-ல் தேர்ச்சி பெற்ற அவர், 1864-ல் ஐசிஎஸ் (ICS) பணியில் சேர்ந்த முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றார்.

சத்யேந்திரநாத் தாகூரின் சாதனைகள்

சத்யேந்திரநாத்தின் குடிமைப் பணி வாழ்க்கை பத்து ஆண்டுகள் நீடித்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர் பணியாற்றியது, அவரைப் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. இது அவரது இலக்கிய ஆர்வத்தை வளர்த்தது, கவிதைகள் மற்றும் பாடல்களை எழுதவும், சமஸ்கிருத படைப்புகளை வங்காள மொழியில் மொழிபெயர்க்க வழிவகுத்தது. குறிப்பாக, "மிலே சபே பாரத சந்தான்" என்ற அவரது பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இது இந்தியத் தேசிய கீதத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் குடிமைப் பணிகளின் தந்தை

சார்லஸ் காரன்வாலிஸ், இந்தியக் குடிமைப் பணிகளை நவீனமயமாக்கவும் சீர்திருத்தவும் பாடுபட்டதால், "இந்தியாவில் குடிமைப் பணிகளின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவின் குடிமைப் பணிகளின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டாலும், உண்மையான மாற்றத்தை உருவாக்கும் சவாலை ஏற்றுக்கொண்டவர் கார்ன்வாலிஸ் தான். காரன்வாலிஸ், இந்தியக் குடிமைப் பணியின் ஒப்பந்த அடிப்படையிலான மற்றும் ஒப்பந்தமற்ற கிளைகள் இரண்டையும் நிறுவினார். இந்தியாவின் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாகவும், ஒரு பிரிட்டிஷ் படைவீரராகவும், அரசியல்வாதியாகவும் (1786-1793, 1805) பணியாற்றிய அவர், 1786 பிப்ரவரி 23 அன்று இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவியை முறைப்படி ஏற்றுக்கொண்டார். குடிமைப் பணியாளர்களை முறையாக நடத்துவதன் மூலம், இந்தியாவில் சட்டத்திற்கு உட்பட்ட, ஊழலற்ற பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஒரு மரபை அவர் நிறுவினார். மேலும், குடிமைப் பணியில் உள்ளவர்கள் தங்கள் சொந்தத் தொழில்களை நடத்துவதையும் அவர் தடை செய்தார்.

Story first published: Monday, September 7, 2026, 16:06 [IST]
Desktop Bottom Promotion