Latest Updates
-
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா?
படிக்காமலேயே அரசியலில் கலக்கிய அரசியல்வாதிகள்!!!
படிப்பு தான் ஒருவரின் மதிப்பை உயர்த்தும் என்று நினைக்க வேண்டாம். படிக்காமலேயே திறமை கொண்டும் வாழ்வில் முன்னேற முடியும். அப்படி படிக்காமலேயே வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பலர். அதுவும் எந்த துறையானாலும் ஆர்வம் என்ற ஒன்று இருந்தால் கண்டிப்பாக சாதிக்கலாம்.
அப்படி சினிமா, அரசியல் போன்றவற்றில் பலர் சாதித்துள்ளனர். இங்கு அதிகம் படிக்காமலேயே அரசியலில் கலக்கிய அரசியல்வாதிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் யாரென்று பார்ப்போமா!!!

காமராசர்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களுள் ஒருவரான காமராசர், தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். இவர் அவ்வளவாக படிக்காவிட்டாலும், தனது திறமையான அரசியலால் முதலமைச்சராக பல ஆண்டுகள் இருந்தார். அதுமட்டுமின்றி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்த அரசியல்வாதிகளுள் ஒருவர் இவரே ஆவார்.

எம்.ஜி.ஆர்
முன்னாள் முதலமைச்சரும், நடிகருமாக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கூட படித்ததில்லை. இருப்பினும் இவர் தன் திறமையான ஆட்சியால் மக்களுக்கு பல நன்மைகளை செய்து, இன்று வரை வாழ்ந்து வருகிறார்.

கலைஞர் கருணாநிதி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலேஜ் சென்றதில்லை. ஏன் பத்தாம் வகுப்பு கூட முடிக்கவில்லை. ஆனால் இவர் சிறந்த எழுந்தாளர். தமிழில் பல திரைப்படங்களுக்கு திரைக்கரை எழுதியுள்ளார்.

ஜெ. ஜெயலலிதா
நடிகையாக இருந்த ஜெயலலிதா பின் அரசியலில் குதித்து, பல சாதனைகளை புரிந்து வந்தார். இவர் மெட்ரிகுலேசனில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர். இவர் கல்லூரி செல்லாவிட்டாலும், இவர் மிகவும் திறமையானவர்.

விஜயகாந்த்
நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கட்சி ஒன்றை ஆரம்பித்து 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர். இவர் 12 ஆம் வகுப்பிற்கு பின், தன் தந்தையின் அரிசி ஆலையில் சேர்ந்துகொண்டார்.



Click it and Unblock the Notifications