Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
3 நாட்களில் மூட்டு வலியை முற்றிலும் போக்கும் ஓர் அற்புத வழி!
இங்கு மூட்டு வலியை உடனடியாக குறைக்கும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏராளமானோர் அன்றாட செயல்களை செய்ய முடியாமல் மூட்டு வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூட்டு வலிக்கிறது என்று மருத்துவரிடம் சென்றால் அவர் மாத்திரைகளை கொடுத்து நம் வயிற்றை புண்ணாக்கி விடுகிறார்கள்.
ஆனால் மூட்டு வலிக்கு ஓர் அற்புத இயற்கை வழி உள்ளது. இக்கட்டுரையில் அந்த அற்புத வலிக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:
வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் - 1 கப்
வரமிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1
வரமிளகாய் பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட் செய்யும் போது வெறும் கைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

செய்முறை #2
கையுறைகளை அணிந்து கொண்டு, வலியுள்ள மூட்டுப் பகுதியில் தடவ வேண்டும். ஒருவேளை பயங்கரமாக எரிச்சலை அனுபவித்தால், உடனே நீரில் கழுவி விடுங்கள். இல்லாவிட்டால், அடுத்த முறையைப் பின்பற்றுங்கள்.

செய்முறை #3
15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த முறையைப் பின்பற்றிய பின், கைகளை முகம் அல்லது கண்களுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

எத்தனை முறை செய்ய வேண்டும்?
இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை என தொடர்ந்து 3 நாட்கள் பின்பற்றினால், மூட்டு வலி பறந்தோடிவிடும்.

இம்முறை எப்படி வேலை செய்கிறது?
வரமிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், வலி நிவாரணி போன்று செயல்படும். இதனால் தான் மூட்டு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

கேப்சைசின் என்ன செய்கிறது?
கேப்சைசின் மூளைக்கு வலி சமிக்கையை அனுப்பும் குறிப்பிட்ட கெமிக்கல்களை அழித்து, வலியைக் குறைக்கும். மேலும் நாம் பயன்படுத்தும் பல வலி நிவாரண க்ரீம்களிலும் இந்த பொருள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை!
* மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.
* காயங்கள் இருந்தால், இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.
* சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.



Click it and Unblock the Notifications