Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
மைசூர் தேங்காய் சட்னி ரெசிபி.. தேங்காய் சட்னிய இந்த மாதிரி செஞ்சு பாருங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
Mysore Coconut Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கடலைப்பருப்பும், தேங்காயும் உள்ளதா? அப்படி இருந்தால் சூப்பரான மைசூர் ஸ்பெஷல் சட்னியை செய்து விடலாம்.
இதுவரை நீங்கள் வழக்கமான தேங்காய் சட்னியைத்தான் இட்லி, தோசைக்கு செய்திருப்பீர்கள். ஆனால் இந்த மைசூர் ஸ்டைல் தேங்காய் சட்னி வழக்கமான கார சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த கடலைப்பருப்பு தேங்காய் சட்னி மைசூரில் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

உங்களுக்கு சுவையான மைசூர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 5 காஷ்மீரி மிளகாய்கள்
- 1 ஸ்பூன் பொடித்த வெல்லம்
- 3 பூண்டு பல்
- 1/2 ஸ்பூன் புளிச்சாறு
- 4 மிளகு
- 3/4 கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- மைசூர் சட்னி செய்வதற்கு, ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பைச் சேர்க்கவும்.
- பின்னர் பருப்பு பழுப்பு நிறத்திற்கு மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் வர மிளகாயைச் சேர்த்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின் வெல்லம், பூண்டு, புளிக்கரைசல் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, மிதமான தீயில் 1 நிமிடம் சமைக்கவும்.
- பின்னர் தேங்காய், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு கலந்து, தொடர்ந்து கிளறியவாறே மிதமான தீயில் 2 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
- இந்த கலவை நன்கு ஆறியதும், சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- இந்த மைசூர் சட்னியை அப்படியே சாப்பிடலாம், நீங்கள் விருப்பப்பட்டால் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்தும் சாப்பிடலாம்.
- மைசூர் சட்னியை உடனடியாகப் பரிமாறவும் அல்லது காற்றுப் புகாத ஒரு டப்பாவில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, 2 நாட்களுக்கு சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications