Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ராகி பன் தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Ragi Bun Dosa With Peanut Chutney Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஒரு காலை டிபன் சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ராகி பன் தோசையையும், வேர்க்கடலை சட்னியையும் செய்து சாப்பிடுங்கள்.
இந்த காம்போ கோடைக்காலத்தில் சாப்பிட ஏற்றது. ராகியை இதுவரை வெறும் கூழாக, களியாக, ரொட்டியாக அல்லது தோசையாக சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு பன் தோசை செய்து சாப்பிடுங்கள். ருசி வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு ராகி பன் தோசையையும், வேர்க்கடலை சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பன் தோசை மற்றும் வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவிற்கு...
* ராகி மாவு - 1 கப்
* ரவை - 1 கப்
* புளித்த தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப் + 1/4 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 3 பல்
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 2 சில்லு (பொடியாக நறுக்கியது)
* வறுத்த வேர்க்கடலை - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
பன் தோசை தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, புளித்த தயிர்
மற்றும் 1 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து, மூடி வைத்து 15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை
சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பூண்டு மற்றும் புளியை சேர்த்து நன்கு வதக்கி,
அதையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய், வறுத்த வேர்க்கடலை, வரமிளகாய்,
பூண்டு, புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கலந்து விட
வேண்டும்.
* அதன் பின் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, சட்னியை தாளிக்க
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், வேர்க்கடலை
சட்னி தயார்.
* அடுத்து சட்னி தாளித்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பன்
தோசை தாளிப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு,
உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லியை தூவி 1 நிமிடம்
வதக்கி இறக்கி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த மாவை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் வதக்கி குளிர
வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கலந்து
விட வேண்டும்.
* மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், 1/4 டம்ளர் நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு சிறிய தவா அல்லது ஆப்ப கல்லை அடுப்பில் வைத்து
சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி மூடி
வைத்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, பன் தோசையை திருப்பி போட்டு 1 நிமிடம் வேக
வைத்து எடுத்தால், சுவையான ராகி பன் தோசை தயார்.



Click it and Unblock the Notifications