Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
ஒரு கப் ராகி மாவும், 1 கேரட்டும் இருந்தா. . காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. அருமையா இருக்கும்..
Ragi Carrot Adai Recipe In Tamil: காலையில் எப்பவும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்வீங்களா? இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் ராகி மாவும், கேரட்டும் இருந்தா, அதைக் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள். இந்த ராகி கேரட் அடை ருசியாக இருப்பதோடு, சத்தானதும் கூட. மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இதற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவையில்லை.
உங்களுக்கு ராகி கேரட் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி கேரட் அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவை சேர்த்து
லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம்
வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் துருவிய கேரட்டை சேர்த்து கேரட்டின் நிறம் மாறும்
வரை வதக்கி,கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு வதக்கியதை ராகி மாவுடன் சேர்த்து நன்கு கிளறி, கொஞ்சம்
கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உருட்டி ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாழை இலை அல்லது பால் கவரை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, உருட்டி வைத்துள்ள ஒரு உருண்டையை எடுத்து மெலிசாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் அதில்
தட்டி வைத்துள்ள அடையை சேர்த்து எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான ராகி கேரட் அடை தயார்.
Image Courtesy: Gomathi's Kitchen



Click it and Unblock the Notifications








