Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சத்தான.. ராகி களியும், தண்ணி சட்னியும்.. எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Ragi Kali With Peanut Neer Chutney Recipe In Tamil: உடல் பலவீனமாக உள்ளதா? காலையில் உடலுக்கு வலு சேர்க்கும்படியான காலை உணவை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ராகி களியை செய்து, அதற்கு வேர்க்கடலை தண்ணி சட்னியை சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிடுங்கள். இது மழை நேரத்தில் சாப்பிட இதமாக இருப்பதோடு, உடலுக்கும் வலு சேர்க்கும். இப்படி ராகி களியை வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால், உடலும் ஃபிட்டாக இருக்கும்.
உங்களுக்கு ராகி களியையும், வேர்க்கடலை தண்ணி சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி களி மற்றும் வேர்க்கடலை தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ராகி களிக்கு...
* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப் + 1 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டீஸ்பூன்
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 7
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 3 பல்
* புளி - சிறிய
* தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கப் ராகி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு
கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் ராகி மாவை எடுத்து, அதில் 1/4 கப் நீரை
ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 3/4 கப் நீரை ஊற்றி,
அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, நீர்
நன்கு சூடானதும், கரைத்து வைத்துள்ள ராகியை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* ராகியானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீதமுள்ள ராகி மாவை
சேர்த்து, மரக்கரண்டி கொண்டு நன்கு ஒன்று சேரும் வரை கிளறி, 5 நிமிடம்
மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* ராகி மாவின் நிறம் அடர் நிறத்தில் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு,
மூடி வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வெள்ளையாகும் வரை
வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பச்சை மிளகாய், பொட்டுக்கடலை,
வேர்க்கடலை, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, புளி மற்றும் தேங்காய்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சட்னியை போட்டு, தேவையான அளவு நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு
கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம்
வதக்கி, சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு கையில் நீரைத் தொட்டு, தயாரித்து வைத்துள்ள ராகி களியை
கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, சட்னி ஊற்றி பரிமாறினால்,
சுவையான ராகி களியும், தண்ணி சட்னியும் தயார்.



Click it and Unblock the Notifications