Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
வருடம் முழுவதும் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. விலை மலிவில் கிடைப்பதால் தான் என்னவோ பலருக்கும் இந்த பழத்தைப் பிடிப்பதில்லை போலும். ஆனால், என்ன தான் விலை குறைவில் கிடைத்தாலும், பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
இந்த பழத்தை ஒருவர் அன்றாடம் தங்களது டயட்டில் சேர்த்து வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். அதிலும் பப்பாளியை ஜூஸ் செய்து, அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால், உடலினுள் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
ஏனெனில் இந்த கலவை உடலின் பல்வேறு உறுப்புக்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். சரி, இப்போது அந்த ஜூஸை எப்படி செய்வதென்றும், எப்போது பருக வேண்டுமென்றும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் காண்போம்.

இதய நோய்கள் தடுக்கப்படும்
பப்பாளி மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்றவை வராமல் தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஃபோலேட், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையானவை. ஆகவே இந்த கலவையை தினமும் ஒருவர் பருகி வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்.

செரிமானம் சீராகும்
பப்பாளி எலமிச்சை கலவையில் உள்ள பீட்டா-கரோட்டீன்கள், வைட்டமின்கள், குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியைக் குறைத்து, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.

புற்றுநோய் தடுக்கப்படும்
பப்பாளி மற்றும் எலுமிச்சையில் உள்ள உட்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட புற்றுநோய்களான குடல், புரோஸ்டேட், இரத்தம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுத்து, உடலை சுத்தம் செய்து, அசாதாரண செல்களின் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் தடுக்கும்.

ஆர்த்ரிடிஸ்
பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவையை உடலினுள் உட்செலுத்தும் போது, அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கத்தைக் குறைக்கும். மேலும் இது மூட்டு வலி, தலை வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்கும்.

பார்வை கோளாறு
இந்த கலவையில் வைட்டமின் ஏ, சி போன்றவை ஏராளமாக உள்ளதால், இது பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு எந்த பார்வை கோளாறும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இந்த கலவையை தினமும் பருகி வாருங்கள்.

மன அழுத்தம் குறையும்
பப்பாளி, எலுமிச்சை கலவையில் உள்ள வளமான வைட்டமின் சி, மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.

ஜூஸ் செய்யும் முறை
சிறிது பப்பாளி பழத்தை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளரில் 3 டேபிள் ஸ்பூன் பப்பாளி ஜூஸையும், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் ஒன்றாக சேர்த்து கலந்து பருக வேண்டும்.

எப்போது பருக வேண்டும்?
இந்த ஆரோக்கியமான ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி தினமும் பருகி வந்தால், உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications