Latest Updates
-
ஏப்ரல் மாதத்தில் நஷ்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்! -
பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்..
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்? - டாக்டர். பிள்ளை விளக்கம்
Leafy Greens And Their Benefits In Tamil: கீரைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு கீரையை உட்கொண்டு வந்தால், உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் கீரைகளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆனால் அந்த கீரையைத் தான் நாம் சரிவர சாப்பிடுவதில்லை. இந்த கீரைகளில் பல வகைகள் உள்ளன. மேலும் அந்த கீரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்களைக் கொண்டுள்ளன.
அதோடு ஒவ்வொரு கீரையும் நமது உடலில் உள்ள குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பது தெரியுமா? டாக்டர் பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலில் உள்ள எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். வாருங்கள் அது என்னவென்பதைக் காண்போம்.

1. பசியின்மை - அகத்திக்கீரை
பசியின்மை பிரச்சனையைக் கொண்டவர்கள் அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டு வரும் போது, பசி நன்கு எடுக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அகத்திக்கீரை சற்று கசப்புச்சுவையுடன் இருப்பதால், அத்துடன் தேங்காய் துருவலை அதிகம் சேர்த்து சாப்பிடலாம்.
2. மலச்சிக்கல் - முளைக்கீரை
ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணமே நார்ச்சத்துள்ள உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாமல் இருப்பது தான். இந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகம் உள்ளன. குறிப்பாக முளைக்கீரையில் இந்த சத்து இன்னும் அதிகமாக உள்ளதால், மலச்சிக்கலால் சிரமப்படுபவர்கள் முளைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட, இயற்கையாகவே மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
3. சரும நோய்கள் - அரைக்கீரை
கோடையில் நிறைய தோல் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த தோல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க அரைக்கீரை பெரிதும் உதவிபுரியும். அதற்கு இந்த அரைக்கீரையை சமைத்து சாப்பிடுவதோடு, அதை அரைத்து சருமத்தில் தடவி வர, பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
4. உயர் இரத்த அழுத்தம் - பருப்புக்கீரை
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் கீரை சாப்பிடுவது நல்லது. அதுவும் பருப்புக்கீரையை வாரத்திற்கு 3-4 முறை உணவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
5. சிறுநீரக பிரச்சனை - சிறுகீரை
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு ஏற்ற கீரை என்றால் அது சிறுகீரை தான். இந்த சிறுகீரை அளவில் சிறியதாக இருந்தாலும், உடலினுள் பெரிய அளவில் மாயங்களை புரியக்கூடியவை. ஆகவே சிறுநீரக பிரச்சனைகள் வரக்கூடாதெனில் இந்த சிறுகீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். அதுவும் அதை பொரியலாகவோ அல்லது கடைந்தோ சாப்பிடலாம்.
6. எலும்பு வலிமை - முருங்கைக்கீரை
எலும்பு தொடர்பான பிரச்சனைகளான எலும்பு பலவீனம், எலும்பு அடர்த்தி குறைவு, எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. ஏனெனில் முருங்கைக்கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளன. அதற்கு இந்த முருங்கைக்கீரையை பொரியலாகவோ, சாம்பாராகவோ சாப்பிடலாம்.
7. ஆஸ்துமா - தூதுவளை
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற கீரை என்றால் அது தூதுவளை தான். இந்த தூதுவளையை ரசமாகவோ, துவையலாகவோ அல்லது தோசை மாவில் கீரையை அரைத்து சேர்த்து தோசையாகவோ சாப்பிடலாம். இப்படி வாரத்திற்கு இந்த கீரையை 3 முறை உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
8. இரத்த சோகை - பசலைக்கீரை
பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும். அதுவும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் இரத்த சோகையை சந்திப்பவர்கள் பசலைக்கீரையை உட்கொள்வது நல்லது. ஏனெனில் இந்த கீரையில் மற்ற கீரைகளை விட இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த கீரையை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்து வர, உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.
9. சர்க்கரை நோய் - வெந்தயக்கீரை
தற்போது சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இப்படிப்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சென்சிட்டிவிட்டியை தூண்டவும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் வெந்தயக்கீரை பெரிதும் உதவி புரியும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அந்த வெந்தயக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வர, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
10. மூட்டு வலி - முடக்கத்தான் கீரை
கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து விடுபட முடக்கத்தான் கீரையை உட்கொள்வது மிகவும் நல்லது. இந்த கீரையை இளம் வயதில் இருந்தே உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் சந்திக்கும் மூட்டு வலியை தவிர்க்கலாம். அதற்கு இந்த கீரையை துவையலாகவோ, தோசை மாவில் அரைத்து சேர்த்து தோசையாகவோ சாப்பிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











