Just In
- 1 hr ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 8 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏன் உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும் என சொல்கிறார்கள் தெரியுமா?
மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அப்படி நாம் சாப்பிடும் உணவை எத்தனை பேர் நன்கு மென்று விழுங்குகிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். முக்கால்வாசி மக்கள் உணவை சரியாக மென்று விழுங்குவதில்லை என்று தான் சொல்வார்கள்.
உண்ணும் உணவை நன்கு மென்று விழுங்கினால் தான், உணவின் முழு நன்மையையும் பெற முடியும். இல்லாவிட்டால், ஆரோக்கியத்தை வழங்கும் உணவும் தீங்கை தான் விளைவிக்கும். எனவே ஒவ்வொருவரும் உணவை நன்கு மென்று விழுங்க வேண்டியது அவசியம்.
இங்கு உணவை நன்கு மென்று விழுங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து, இனிமேலாவது திருந்துங்கள்.
நன்மை #1
உணவை நன்கு மென்று பொறுமையாக உட்கொள்வதன் மூலம், அளவுக்கு அதிகமான உணவை உட்கொண்டு அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம். மேலும் உணவை நன்கு மென்று உண்டால், குறைவான உணவிலும் வயிறு நிறைந்திருப்பதை உணர்வீர்கள்.
நன்மை #2
உண்ணும் உணவை மென்று சாப்பிடுவதால், உணவுகள் எளிதில் இரைப்பையில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
நன்மை #3
செரிமானமானது வாயில் இருந்து தான் ஆரம்பமாகிறது என்பது தெரியுமா? ஆம், உணவை மெல்லும் போது, வாயில் உள்ள உமிழ்நீர் மற்றும் பற்களால் உணவுகள் நன்கு அரைக்கப்பட்டு, சிறு துகள்களாக வயிற்றுக்குள் அனுப்பப்படுகிறது. இதனால் வயிறு உப்புசத்துடன் இருப்பதில் இருந்து விடுபடலாம்.
நன்மை #4
உண்மையில் எப்பேற்பட்ட சுவையான உணவும், நன்கு மென்று சாப்பிடும் போது தான், அதன் உண்மையான சுவை தெரியும். மேலும் அந்த இன்பமே தனி தான்.
நன்மை #5
உணவை மென்று சாப்பிடும் போது, செரிமானத்தில் ஈடுபடும் குறிப்பிட்ட ஹார்மோன்களான லிப்தின், க்ரெலின் போன்றவை உற்பத்தி செய்வதற்கு போதிய நேரம் கிடைக்கும்.
நன்மை #6
ஒருவர் உணவை உட்கொள்ளும் போது குறைந்தது 30-50 முறையாவது வாயை அசைப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இக்காலத்தில் யாரும் உணவை மென்று சாப்பிடுவதில்லை, வாயில் உணவைப் போட்டதும் அப்படியே விழுங்கிவிட்டு, பின் வயிறு சரியில்லை என்று புலம்புவார்கள்.
நன்மை #7
முக்கியமாக உணவை நன்கு மென்று விழுங்குவதால், உடல் எடை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கப்படுவதாக நிறைய உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால், முதலில் உணவை நன்கு மென்று விழுங்குங்கள்.