Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை தொடர்ந்து மாற்றுகின்றன. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏப்ரல் 2-ஆம் தேதி, செவ்வாய் மீன ராசிக்குள் நுழைகிறது. அங்கு ஏற்கனவே சனி கிரகம் நிலைத்திருப்பதால், இவ்விரு கிரகங்களுக்கும் இடையிலான ஒரு அரிய சேர்க்கை உருவாகிறது.
மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். வேத ஜோதிடத்தின்படி, சனிபகவான் கர்மம் மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்புடையது; அதே வேளையில், செவ்வாய் கிரகம் ஆற்றல், துணிச்சல் மற்றும் செயல் ஆகியவற்றைச் குறிக்கிறது. பொதுவாக சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் "தீய" கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணையும்போது, அவற்றின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்கள் இந்த அரிய கிரக சேர்க்கையால் நேர்மறையான பலன்களை அனுபவிக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, இந்த அரிய கிரகச் சேர்க்கையானது வருமானம், ஆதாயங்கள் மற்றும் சமூகத் தொடர்புகளுடன் தொடர்புடைய 11-ஆம் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் அவர்கள் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்; இருப்பினும், அவர்களின் கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இது அவர்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வணிக கூட்டணிகளை உருவாக்கலாம் மற்றும் சமூக சேவைகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும்.
அவர்களின் மன உறுதி வலிமையாக இருக்கும், இது மற்றவர்களை ஊக்குவிக்கும். மேலும் இந்த காலகட்டத்தில், நாட்டிற்குள்ளும் வெளிநாட்டிலும் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் கூடிவரும். ஆரோக்கியம் இப்போது திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்
செவ்வாய் மீன ராசியில் பிரவேசிப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத் துறைகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரிய சேர்க்கையானது, தொழில் வளர்ச்சி மற்றும் நற்பெயருடன் தொடர்புடைய உங்கள் பத்தாம் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல சாதனைகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
அவர்களின் வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களிடையே நிலவி வந்த சொத்து தகராறுகள் முடிவுக்கு வரும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். அவர்கள் தங்கள் உழைப்புக்கு ஏற்ப தகுந்த பலன்களை அடைவார்கள்.
துலாம்
செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கையானது, ஆரோக்கியம், போட்டி மற்றும் சவால்களை நிர்வகிக்கும் உங்கள் 6-ஆம் வீட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். வெற்றியை நோக்கிய அவர்களின் பயணம் மிகவும் இந்த காலகட்டத்தில் வேகமாக இருக்கும். மேலும் அவர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எனவே அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருப்பார்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியானத் தருணங்களைக் காண்பார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இது மிகவும் பொருத்தமான நேரமாகும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்யலாம். அனைத்து பணிகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். இந்த காலகட்டத்தில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும், பயன்படுத்தவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
