Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல அழற்சி அதிகமா இருக்கு-ன்னு அர்த்தமாம்.. -
குரு-புதன் உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
5 மாதங்களில் 2 முறை நடக்கும் குருப்பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
4 தக்காளி, 2 வெங்காயம் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. குழப்பி அடிப்பாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனநிம்மதியான நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
ஏப்ரல் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி பச்சடியை செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...! -
ஒரே தொகுதியில் பலமுறை வெற்றி பெற்று தனது கோட்டையாக மாற்றிய அரசியல் தலைவர்கள்! யார்யார்-ன்னு பாருங்க.. -
பர்பெக்ட்டான கணவராக இருக்கும் 4 ராசிகள் இவங்கதான்... இவங்க புருஷனா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்...!
இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? டெல்லியும் அல்ல, மும்பையும் அல்ல...!
இந்தியா பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பு 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த ஒரு நாடாகும். இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் தனக்கே உரித்தான தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
சில மாநிலங்கள் தங்கள் கலாச்சாரத்திற்காகவும், சில மாநிலங்கள் தங்கள் வரலாற்றுக்காகவும், வேறு சில மாநிலங்கள் தங்கள் இயற்கை அழகுக்காகவும் புகழ்பெற்றவை. ஆனால், தனது புவியியல் அமைவிடத்தாலும் முக்கியத்துவத்தாலும் மிகவும் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துள்ள ஒரு மாநிலம் உள்ளது. இந்த மாநிலம் பெரும்பாலும் "இந்தியாவின் இதயம்" என்றே அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் அது இந்த பெயருக்கு பொருத்தமானது என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் இதயம்
மத்தியப் பிரதேசம் சரியாக இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதாலும், மிகுந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்வதாலும், 'இந்தியாவின் இதயம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஐந்து மாநிலங்களால் சூழப்பட்டிருப்பதால், நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையிலான ஒரு முக்கிய இணைப்பாக விளங்குகிறது. செழுமையான வரலாறு, பழமையான கோவில்கள், பாரம்பரியச் சின்னங்கள், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளம் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற மத்திய பிரதேசம், இந்தியாவின் ஆன்மாவை உண்மையாகவே பிரதிபலிக்கிறது.
மத்திய பிரதேசத்தின் வரலாற்று சிறப்பு
இந்திய வரலாற்றில் மத்தியப் பிரதேசம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியச் சின்னமாகத் திகழும் பீம்பேட்கா குகைகள், 30,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பாறை ஓவியங்களைக் கொண்டுள்ளன. இவை ஆதி மனிதர்களின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கின்றன. இங்குள்ள பேரரசர் அசோகரால் கட்டப்பட்ட சாஞ்சி ஸ்தூபி, புத்த சமய நம்பிக்கையின் மற்றும் கட்டிடக்கலையின் ஒரு அடையாளமாகத் கம்பீரமாக நிற்கிறது. கஜுராஹோ கோவில்கள், தங்கள் உலகப் புகழ்பெற்ற சிற்ப வேலைப்பாடுகள் மூலம் இந்தியாவின் கலைச் சிறப்பை உலகிற்கு வெளிப்படுத்துகின்றன.
பல நூற்றாண்டுகளாக, மௌரியர்கள், குப்தர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் மராட்டியர்கள் போன்ற வம்சங்கள் இம்மாநிலத்தை வடிவமைத்துள்ளன. அவர்கள் விட்டுச் சென்ற கோட்டைகள், கோவில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இந்தியாவின் பொற்காலத்தின் அடையாளங்களாக இன்றும் உள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் கலாச்சாரப் பாரம்பரியம்
மத்தியப் பிரதேசம் இந்தியாவின் கலாச்சார மையமாகவும் திகழ்கிறது. கஜுராஹோ நடன விழாவும், உஜ்ஜைன் சிம்ஹஸ்த கும்பமேளாவும் மத்திய பிரதேசத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீகச் செழுமையைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. இந்த மாநிலத்தின் சந்தேரி மற்றும் மகேஸ்வரி சேலைகள் போன்ற கைவினைப் பொருட்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. அதேபோல, மரவேலைப்பாடுகள், பழங்குடியினரின் அணிகலன்கள் மற்றும் நாட்டுப்புற ஓவியங்கள் போன்றவை மாநிலத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்றன.
இந்தியாவின் புலிகளின் மாநிலம்
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இருப்பதால், மத்திய பிரதேசம் 'இந்தியாவின் புலிகள் மாநிலம்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள புகழ்பெற்ற சரணாலயங்களான கன்ஹா, பந்தவ்கர், பெஞ்ச் மற்றும் சத்புரா ஆகியவை உலகம் முழுவதிலுமிருந்து வரும் இயற்கை ஆர்வலர்களையும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களையும் ஈர்க்கின்றன. புலிகள் மட்டுமின்றி, சிறுத்தைகள், பாரசிங்கா மான்கள், காட்டு நாய்கள் மற்றும் அரிய வகை பறவைகளுக்கும் இந்த காடுகள் பாதுகாப்பான புகலிடமாகத் திகழ்கின்றன.
மத்திய பிரதேசம் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்
இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம்
மத்தியப் பிரதேசம், 308,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவுடன், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது. அதன் மிகப்பெரிய பரப்பளவில் காடுகள், பீடபூமிகள் மற்றும் வளமான சமவெளிகள் அடங்கியுள்ளன. இது மத்திய பிரதேசத்தை கலாச்சாரரீதியாகவும் சுற்றுச்சூழல்ரீதியாகவும் பன்முகத்தன்மை கொண்டதாக ஆக்குகிறது.
பன்னா வைரச் சுரங்கங்கள்
இந்தியாவின் ஒரேயொரு செயல்படும் வைரச் சுரங்கங்மான பன்னா வைரச் சுரங்கங்கள் இந்த மாநிலத்தில்தான் அமைந்துள்ளது. இந்த வைர சுரங்கத்தின் வைரங்கள் அவற்றின் தரத்திற்காக உலகப் புகழ்பெற்றவை.
கும்பமேளா
உஜ்ஜயினி இந்தியாவின் மிகவும் பழமையான ஆன்மீக நகரங்களில் ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய சமயக் கூட்டங்களில் ஒன்றான 'சிம்ஹஸ்த கும்பமேளா' இங்குதான் நடைபெறுகிறது. இந்த புனித நிகழ்வில் பங்கேற்பதற்காக, இலட்சக்கணக்கான பக்தர்களும் துறவிகளும் இங்கு வருகை தருகின்றனர்.
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூன்று யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் அமைந்துள்ளன: கஜுராஹோ கோயில்கள், சாஞ்சி ஸ்தூபி மற்றும் பீம்பேட்கா பாறை வாழிடங்கள்.



Click it and Unblock the Notifications












