Latest Updates
-
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம்
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
பிறர் மனைவி மீது ஆசை கொள்ளுதல் என்பது மிகவும் மோசமான விஷயமாகும். தர்மத்தின் படியும் சரி, கலாச்சாரத்தின் அடிப்படையிலும் சரி இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகும். ராமாயணம் என்ற இந்தியாவின் மாபெரும் இதிகாசத்திற்கு ஆரம்பப் புள்ளியே இதுதான். ஆனால் பிறர் மனைவியை கவர்வது ஒரு அனுமதிக்கப்பட்ட சடங்காக சில கலாச்சாரங்களில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

"மனைவியைக் கடத்துதல்" அல்லது மணப்பெண் கடத்தல் என்பது மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஒரு தனித்துவமான பாரம்பரியம் மற்றும் பெரும்பாலும் சட்டவிரோதமான நடைமுறையாகும். தரவுகளின் படி, இது ஃபுலானி இனக்குழுவின் ஒரு பிரிவினரான வோடாபே மக்களின் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பாரம்பரியமாகும். அவர்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்கள் மற்றும் இந்த பாரம்பரியத்திற்குப் பின்னால் உள்ள சுவாரஸ்ய உண்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த நாட்டில் ஆண்கள் பிற ஆண்களின் மனைவிகளைத் திருடிக்கொள்கிறார்கள்?
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரைச் சேர்ந்த ஃபுலானி இனக்குழுவின் ஒரு பிரிவினரான வோடாபே மக்கள் மத்தியில், ஆண்கள் திருமண விவகாரத்தில் ஒரு தனித்துவமான வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் ஏற்கனவே திருமணமாகிவிட்ட பெண்களை அவர்களின் கணவரிடமிருந்து கவர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது உண்மைதான்.
கெரேவோல் திருவிழா என்றால் என்ன?
இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் 'கெரேவோல்' (Gerewol) திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இது ஆண்களும் திருமணமான ஆண்களும் பெண்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் போட்டியிடும் ஒரு அழகிப் போட்டி போன்ற நிகழ்வாகும். இந்த போட்டியில் ஆண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதோடு, தங்களை அழகாக அலங்கரித்துக் கொள்கிறார்கள்.
இந்த திருவிழா எப்படி கொண்டாடப்படுகிறது?
இந்த திருவிழாவில் ஆண்கள் ஒப்பனை செய்துகொண்டு, திருமணமான ஒரு பெண்ணுக்காகப் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வோடாபே இன ஆண்கள் தங்களை உலகின் மிகவும் அழகானவர்கள் என்று நம்புகிறார்கள். திருவிழாவின் போது, அவர்கள் ஒப்பனை பூசி தங்கள் முகத்தோற்றத்தை மெருகேற்றுவற்கு பல மணிநேரம் செலவிடுகிறார்கள். இதில் வெண்மையான கண்கள், வெண்மையான பற்கள் மற்றும் நேரான மூக்கு ஆகியவை அடங்கும். ஒரு பெண் எந்தவொரு ஆணையும் கவர்ச்சிகரமானவராகக் கண்டால், கெரெவோல் திருவிழாவின் போது அவர் மீது தனக்கு ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்துவார்.
இந்த பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?
இப்பண்பாட்டின் மிகவும் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரு ஆண் அப்பெண்ணை யாருடைய கண்ணிலும் படாமலோ அல்லது பிடிபடாமலோ ரகசியமாகச் சந்தித்து, அவருடன் ஒரு இரவைக் கழித்து விட்டால், அப்பெண்ணின் முந்தைய திருமணம் தானாகவே முறிந்துவிடுகிறது; அவர் அந்த ஆணின் புதிய மனைவியாகிறார். எந்த செலவும் இல்லாமல் மிகவும் சுவாரஸ்யமான முறையில் இவர்கள் விவகாரத்தை செய்கிறார்கள்.



Click it and Unblock the Notifications

