Latest Updates
-
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க -
வருடத்திற்கு 2 ரயில்கள் மட்டுமே வரும் இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் எது தெரியுமா? -
40 வயதிற்கு மேல் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டிய சைவ மற்றும் அசைவ உணவுகள்! - பட்டியலிடும் டாக்டர்! -
இந்த 5 ராசிக்காரங்க யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிக்கும் அசாத்திய புத்திசாலிகளாம் -
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
உடல் எடையை குறைக்க உதவும் ஆம்லெட் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-புதனின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான சேலம் ஸ்டைல் கதம்ப சட்னி ரெசிபி -
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி
மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா?
நிறைய பேருக்கு வரும் சந்தேகங்களில் ஒன்று தான் மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா என்பது. ஏனெனில் மாதவிடாய் காலத்தில் பெண்களை அசுத்தம் என்று ஒதுக்கி வைப்பது தான் காரணம். ஆனால் பலரும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அனைத்து பெண்களுக்குமே இந்த நிலை இருக்காது.
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றிய கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...
சில நேரங்களில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டாலும் கருத்தரிக்கக்கூடும். மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், ஒருசில நன்மைகளும் உள்ளன. அதே சமயம் தீமைகளும் உள்ளன. சரி, இப்போது மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா இல்லையா என்றும், உடலுறவில் ஈடுபட்டால் விளையும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்றும் பார்ப்போம்.
கர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா?

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளதா?
ஆம். பலரும் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க முடியாது என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது.

அனைத்து இரத்தக்கசிவும் மாதவிடாய் சுழற்சி அல்ல
சில நேரங்களில் பெண்களுக்கு ஓவுலேசன் (கருமுட்டை வெளிவரும் நாள்) நடைபெறும் போது லேசாக இரத்தக்கசிவு ஏற்படும். இந்நேரத்தில் கருமுட்டைகள் முதிர்ந்திருக்கும். இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கக்கூடும்.

ஓவுலேசன் எப்போதும் ஏற்படலாம்
அனைத்து பெண்களுக்கும் ஓவுலேசன் மாறுபடும். மேலும் இதனை கண்டறிவது என்பது கடினம். ஏனெனில் விந்தணு கருமுட்டையுடன் இணைய மூன்று நாட்கள் போதும் என்பதால், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது ஆபத்தானது.

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்கள் உச்ச நிலையை எளிதில் அடைவதோடு, அப்போது வெளிவரும் எண்டோர்பின் என்னும் ஹஹார்மோன் இயற்கை வலி நிவாரணியாக செயல்படுவதுடன், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், வயிற்றுப் பிடிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், உணர்ச்சி அதிகம் இருப்பதால், பெண்கள் இன்பத்தை நன்கு அனுபவிக்கலாம்.

தீமைகள்
நன்மை என்ற ஒன்று இருந்தால், அதில் தீமையும் இருக்கும். எவ்வளவு தான் காண்டம் பயன்படுத்தி மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டாலும், பாலியல் நோய்கள் மற்றும் இதர நோய்த்தொற்றுகள் எளிதில் தொற்றக்கூடும். ஆகவே முடிந்த வரையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications











