Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்!!!
ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை தினம் தினம் நீக்குவது தான். 'Detoxification' என்ற ஆங்கில வார்த்தைக்கு இரத்தத்தை சுத்தப்படுத்துதல் என்று பொருள். நுரையீரலுக்குள் சென்று சுத்திகரிக்கப்படும் இரத்தத்திலுள்ள நச்சுப் பொருட்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். மேலும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற சிறுநீரகங்கள், குடல்கள், நுரையீரல் மற்றும் தோல் ஆகியவற்றும் நமக்கு உதவி செய்கிறது.
பொதுவாக உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் செயல்பாட்டில் கீழ்கண்ட சில வழிமுறைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
1. விரதம் இருப்பதன் மூலம் உடலின் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் போக்கலாம்.
2. நுரையீரலை தூண்டுவதன் மூலம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கலாம்.
3. சிறுநீரகம், தோல் மற்றும் நிணநீர் (Lymph) ஆகியவற்றைப் பேணுவதன் மூலம் நச்சுப்
பொருட்களை வெளியேற்ற முடியும்.
4. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதலின் மூலம் நீக்க முடியும்.
5. ஆரோக்கியமான ஊட்டச்சத்துகளை சாப்பிடுவதன் மூலம் நச்சுக்களை அகற்றலாம்.
உடலுக்கு செய்து வந்த தவறான செயல்களை மற்றிக் கொள்ள , இங்கே தரப்பட்டிருக்கும் எளிய வழிகள் உதவும். இந்த நச்சுப் பொருட்களை நீக்கும் திட்டத்தை கவனமாக கையாண்டு, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் மேற்கண்ட வழிமுறைகள் மட்டுமல்லாமல், கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலும், உடலில் தங்கியிருக்கும் பல்வேறு நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்கு அடிமை
உடலை சுத்தப்படுத்துவதற்கு முதலில் செய்ய வேண்டியது பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடத் தொடங்குவது தான். இந்த வழிமுறை நுரையீரலில் உள்ள நொதிகளை சுறுசுறுப்பாக்குவதோடு, உடலில் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களையும் அழித்துவிடும்.

இயற்கைப் பொருட்கள்
பூச்சிக்கொல்லிகள் மற்றும் மருந்துப் பொருட்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் இயற்கையான உணவுப் பொருட்களக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

மூலிகை டீ
க்ரீன் டீ அல்லது சாமோமைல் டீ (chamomile tea) ஆகியவை செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மேலும் இந்த இரண்டு தேநீர் வகைகளும், இரத்த ஓட்டத்தை தூண்டவும் மற்றும் நச்சுப் பொருட்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை உற்பத்தி செய்ய
கந்தக அமிலம் (சல்ஃபியூரிக் அமிலம்) நிரம்பிய பூண்டு மற்றும் முட்டை போன்ற பொருட்கள் சாப்பிடுவதை அதிகப்படுத்தவும். இந்த பொருட்கள் உடலில் குளுதாதயோன்(gluthathione) என்ற உயிரக எதிர்பொருட்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இந்த உயிரக எதிர்பொருளானது உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களான வேதிப்பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

எலுமிச்சை சாறு
தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை பழச்சாற்றை குடித்து வருவதால், உடலை சுத்தப்படுத்தி, ஆல்கலைஸை வெளியேற்றி விடும். இது கிருமிகளை சுத்தப்படுத்துவதில் மிகவும் சக்தி வாய்ந்த பானமாகும். எனவே, தினமும் எலுமிச்சை பழத்தை பிழிந்து ஜூஸ் போட்டு குடிக்கத் தொடங்குங்கள்.

சர்க்கரைக்கு நோ!!
உடல் இயக்கத்தை வேகப்படுத்த மற்றும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை சுத்தப்படுத்த, தினசரி எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவினை குறைக்க வேண்டும். இனிப்பு பானங்கள், தேன், வெல்லம் மற்றும் செயற்கை இனிப்புக்கள் ஆகிவற்றில் இருந்தும் சற்று விலகியே இருக்கவும்.

தண்ணீர்!!
ஒரு நாளைக்கு குறைந்தது 8-12 டம்ளர் தண்ணீரை தினமும் சேர்த்துக் கொள்ளவும்; இதனால் உடலிலுள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் கழிக்கும் போதும் மற்றும் வியர்வையின் முலம் வெளியேறி விடும்.

உணவின் அளவு
குறைவான அளவு உணவை சாப்பிடவும், ஆல்கஹால் குடிப்பதை ஒரு மாதத்திற்காவது நிறுத்தி வைக்கவும். இந்த வழிமுறை உடலுக்கு சக்தியை அதிகப்படுத்தவும் மற்றும் உடல் எடை, கொழுப்பு மற்றும் இரத்தத்திலுள்ள சர்க்கரை ஆகியவற்றை குறைக்கவும் செய்யும்.

மசாஜ்
உடலுக்கு அவ்வப்போது மசாஜ் செய்யவும்.

உடற்பயிற்சி
தினசரி 45 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அதுவும் தினமும் நடத்தல், ஓடுதல், ஜாக்கிங் செய்தல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளோடு தொடங்கவும். இந்த உடற்பயிற்சிகள் உடலை உறுதியாக வைத்திருப்பதுடன், மனதையும் நலமாக வைத்திருக்க உதவும்.

சுவாசிக்கும் முறை
முழுமையாக சுவாசிக்கவும், அது உடல் நலனை அதிகரிக்க மற்றும் உடலிற்கு ஆக்ஸிஜனை ஏற்றுக்கொள்ள உதவி செய்யும்.

நாசி வழியை சுத்தப்படுத்தவும்
பொதுவாகவே வசித்து வரும் சுற்றுச்சூழல், குப்பைகள் மற்றும் மாசு நிறைந்த இடமாகவும் இருப்பதால், பல்வேறு ஒவ்வாமை பிரச்சனைகளும் வருவதாக உள்ளது. இந்த பிரச்சனைகளை குறைக்க, மூக்கின் சுவாசப் பாதையை அவ்வப்போது சுத்தம் செய்யவும். அதன் மூலம் காற்றிலுள்ள மாசுப் பொருட்கள் நீக்கப்படும், நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

யோகா
யோகாசனம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், மனதையும் சுத்தப்படுத்தும் விஷயமாகவும் உள்ளது. தினசரி காலை வேளைகளில் எளிமையான யோகாசனங்கள் செய்வதன் மூலம், உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றலாம்.

பழச்சாறுகள்
புத்துணர்ச்சிமிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்படும் பழச்சாறுகளை அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு
சோர்வு மற்றும் சோம்பேறித்தனத்தில் இருந்து உடலை பாதுகாக்க விரும்பினால், போதுமான அளவு தூக்கமானது அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 மணி நேரம் நிம்மதியாக தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சருமம்
சருமத்திலுள்ள கிருமிகளை நீக்கும் பொருட்டாக, சருமத்தின் மேல் உள்ள இறந்த பகுதியை மெதுவாக சுரண்டி எடுத்தல் அல்லது பிரஷ் கொண்டு தேய்த்து விடுவது நல்ல பலன் தரும். மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தக் கூடிய விஷயமாகவும் உள்ளது.

நல்ல பழக்கவழக்கம்
தொடர்ந்து புகைப்பிடித்தாலோ அல்லது ஆல்கஹால் விரும்பியாக இருந்தாலோ, தயவு செய்து அவற்றை உடனடியாக நிறுத்தி விடவும். மேலும், அவ்வப்போது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும், அது உடல் நலனைக் கெடுத்து விடும்.

சாப்பிடும் முறை
உணவை சாப்பிடும் போது, பொறுமையாக உண்ணவும். மேலும் உணவை நன்றாக மென்று சாப்பிடும் பொருட்டாக, உணவு உண்ணும் நேரத்தை அதிகப்படுத்தவும். மெதுவாக சாப்பிடுவதன் மூலம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதுடன், உணவை ரசித்த வண்ணம் சாப்பிடவும் முடியும்.

மைக்ரோவேவ் ஒரு எதிரி
மைக்ரோவேவ்வை பயன்படுத்தி உணவுகளை சமைக்கும் போது, அது உணவிலுள்ள புரோட்டீன் அமைப்பை மாற்றி விடும் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவாகவும் மாறிவிடும். மேலும், மைக்ரோவேவ் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உடலை சேதப்படுத்தும் வாய்ப்பும் உண்டு.

நிறமூட்டப்பட்ட உணவுகளுக்கு நோ!!
இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அந்த உணவுகளில் செயற்கையான நிறமூட்டிகள் சேர்க்கப்படுகிறது. அத்தகைய நிறமூட்டிகளில் கலந்துள்ள நச்சுப் பொருட்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிப்பதுடன், உடலின் பிற பாகங்களையும் பாதிக்கின்றன.



Click it and Unblock the Notifications











