Latest Updates
-
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்..
மூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளைத் தடுக்க சில டிப்ஸ்...
கரும்புள்ளிகள் எதற்கு வருகிறது என்று தெரியுமா? சருமத்துளைகளில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அதிக அளவில் சேர்ந்து, சருமத்துளைகள் அடைத்து ஒரு கட்டத்தில் அது கரும்புள்ளிகளாக மாறுகின்றன.
கரும்புள்ளிகளைப் போக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்!!!
பெரும்பாலும் இந்த பிரச்சனை எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிக அளவில் இருக்கும். ஏனெனில் அவர்களுக்குத் தான் சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் சுரக்கும். அதுமட்டுமின்றி, சருமத்திற்கு மேக்கப் அதிக அளவில் பயன்படுத்தினாலும் இப்பிரச்சனை எழும்.
மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள்!!!
சரி, இப்போது கரும்புள்ளிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

கிளின்சர்
கெமிக்கல் அதிகம் உள்ள கிளின்சர்கள், சருமத்தில் அளவுக்கு அதிகமான எண்ணெய் பசையை உற்பத்தி செய்யும். இதனால் கரும்புள்ளிகள் அதிகமாகும். எனவே கெமிக்கல் கலந்த கிளின்சர்களை அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

சுத்தமான தலையணை உறை
பொதுவாக தலையணையில் அதிக அளவில் இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகள் இருக்கும். அதுமட்டுமின்றி, தலையில் இருந்து எண்ணெயும் தலையணையால் உறிஞ்சப்படும். எனவே அத்தகைய தலையணை உறையை அடிக்கடி துவைத்து பயன்படுத்த வேண்டும்.

இயற்கையான கிளின்சர்கள்
சருமத்தில் உள்ள அழுக்குள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, கரும்புள்ளிகள் வராமல் தடுக்க வேண்டுமெனில், இயற்கையான கிளின்சர்களான பால், ரோஸ் வாட்டர், தக்காளி சாறு, உருளைக்கிழங்கு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

மேக்கப்
முகத்திற்கு மேக்கப் அதிகம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் அழகைக் கெடுக்கும் சரும பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமே மேக்கப் சாதனங்கள் தான்.

ஆவிப்பிடிப்பது
வாரம் ஒருமுறை ஆவி பிடித்து வந்தால், அடைத்திருக்கும் சருமத்துளைகள் விரிவடையும். இதனால் எளிதில் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கிவிடலாம்.



Click it and Unblock the Notifications











