கர்நாடகா ஸ்டைல் கலக்கலான சட்னி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்...!

Posted By:

Tumkur Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையும், இரவும் பிரதான உணவாக இருப்பது இட்லி அல்லது தோசைதான். தினமும் இட்லி, தோசை செய்வது ஈஸியாக இருந்தாலும் அதற்கு ஏற்ற சரியான சைடிஷ் செய்வது என்பது எளிதான காரியமல்ல. இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

எந்த வகையான சட்னி மாற்றி மாற்றி செய்தாலும் அலுத்து விடுகிறதா? சைடிஷ் என்ன செய்வது என யோசிச்சு தலைவலி வருதா? எப்படி தான் புதுமையாக செய்வதுன்னு யோசிக்கிறீங்களா? கவலைய விடுங்க நமக்கு கை கொடுக்க தான் பக்கத்து மாநிலங்கள் இருக்கே. ஆமாங்க இன்னைக்கு கர்நாடகா தும்கூர் ஸ்பெஷல் சட்னி தான் பாக்க போறோம். இந்த சுவையான தும்கூர் சட்னி எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Tumkur Chutney Recipe How to Prepare Tumkur Chutney


தேவையான பொருட்கள்:

- உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5 அல்லது 6
- இஞ்சி - ஒரு துண்டு(ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- வரமிளகாய் - 3
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- புதினா - ஒரு கைப்பிடி அளவு
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- தேங்காய் - ½ மூடி
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.

- மண் இல்லாமல் இஞ்சியை அலசி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.

- கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலை இலைகளை தண்ணீரில் சுத்தமாக அலசி உலர விடவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.

- வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயில் சுத்தம் செய்து வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

- பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

- அதனுடன் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

- பின் அதில் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வறுக்கவும்.

- சுத்தம் செய்து வைத்த புதினா, கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலை இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

- பின் அதில் பெருங்காயம் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

- சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும்.

- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- கடைசியாக கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான தும்கூர் சட்னி தயார்!

[ of 5 - Users]
Story first published: Friday, May 23, 2025, 19:12 [IST]
Desktop Bottom Promotion