Latest Updates
-
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்!
ஜல்லிக்கட்டு பற்றி டாக்டர். பிள்ளை கூறுபவை - வீடியோ!
இங்கு டாக்டர். பிள்ளை ஜல்லிக்கட்டு பற்றி கூறிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் சென்னை மெரீனாவில் துவக்கிய ஜல்லிக்கட்டுக்கு நீதி என்ற போராட்டம். தமிழகம் எங்கும் பரவி எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரும் மாணவ எழுச்சி போராட்டமாக நடந்து வருகிறது.
தமிழை மட்டுமே தலைவனாக கொண்டு துவங்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றியும் கிட்டிவிடும் என்ற செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
டாக்டர். பிள்ளை
ஜல்லிக்கட்டு குறித்து பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் தங்கள் ஆதரவையும், ஜல்லிக்கட்டு குறித்து தங்கள் அறிந்த தகவல்களை மக்களுக்கு தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் டாக்டர் பிள்ளை அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள்...
ஜல்லிக்கட்டு பற்றிய மேலும் சில தகவல்கள்....
ஜல்லிக்கட்டு உண்மைகள்!
ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளையை குறிக்கும் சொல்லாகும். காளையை ஓடவிட்டு அதை வீரர்கள் ஓடிபிடித்து அடக்குவது தான் ஜல்லிக்கட்டு. இதில் மிருகவதை இல்லை என்பது விளையாட்டு வீரர்களின் கருத்து.

சொல்லப் போனால், காளை முட்டி உயிரிழந்த வீரர்கள் தான் அதிகம். கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தான் ஜல்லிக்கட்டு அதிகமாக நடத்தப்படுகின்றது. மதுரை, பாலமேடு, புதுக்கோட்டை, நார்த்தாமலை, தேனீமலை போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு பிரபலமாகும்.
தொடர்ந்து படிக்க: ஜல்லிக்கட்டு பற்றி பலரும் அறியாத வரலாற்று உண்மைகள்!
ஜல்லிக்கட்டும் வர்த்தக அரசியலும்!
ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் பீட்டா மட்டும் தான் இருக்கிறதா? இந்த தடைக்கு பின்னணியில் மறைந்திருக்கும் உலக வர்த்தக அரசியலும், இதனால் பாதிக்கப்படும் நமது ஆரோக்கியம் பற்றியும் இதுவரை எந்த ஒரு மருத்துவரும் கூட வாய் திறந்ததில்லை.
மேற்கத்திய மோகம், பாக்கெட்டில் அடைத்து கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்குவோம். முதலில் இலவசமாக நம்மை அடைந்தது, பிறகு விலை குறைவானது என மருவியது. இப்போது பசும்பால் என்ற ஒன்று இருந்ததற்கான தடையமே இல்லாமல் போய்விட்டது.
தொடர்ந்து படிக்க: ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் இருக்கும் வர்த்தக அரசியலும், பாழாகும் நமது ஆரோக்கியமும்!



Click it and Unblock the Notifications












