Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க..
Ramadan Special Mutton Nombu Kanji Recipe In Tamil: ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களில் தெருவே மணக்கும் வகையிலான சுவையான நோன்பு கஞ்சி வழங்கப்படும். இந்த கஞ்சியை நோன்பு முடிந்ததும் இஃப்தார் வேளையில் இஸ்லாமிய மக்கள் குடிப்பார்கள். இந்த கஞ்சி சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.
இந்த நோன்பு கஞ்சியை மூன்று விதமாக செய்யலாம். அதில் காய்கறிகள் சேர்த்து சைவ நோன்பு கஞ்சியாகவோ அல்லது மட்டன் அல்லது சிக்கன் சேர்த்து அசைவ நோன்பு கஞ்சியாகவோ தயாரிக்கலாம்.

உங்களுக்கு இந்த நோன்பு கஞ்சி பிடிக்குமா? அப்படியானால் அதை உங்கள் வீட்டிலேயே குக்கரில் ஈஸியாக செய்து சாப்பிடலாம். அதுவும் உங்களுக்கு மட்டன் நோன்பு கஞ்சி பிடிக்குமானால், 100 கிராம் மட்டன் கொத்துக்கறி இருந்தால் போதும் அட்டகாசமாக நோன்பு கஞ்சி செய்து சுவைக்கலாம்.
உங்களுக்கு மட்டன் நோன்பு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் நோன்பு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சரிசி நொய் - 250 கிராம்
* பாசிப்பருப்பு - 100 கிராம்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
* உப்பு - 1/2 ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* சோம்பு - 1/2 ஸ்பூன்
* சீரகம் - 1/2 ஸ்பூன்
* மட்டன் கொத்துக்கறி - 100 கிராம்
* கடலை எண்ணெய் - 50 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - 2 1/2 லிட்டர்
செய்முறை:
* முதலில் அரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் பாசிப்பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, கொத்தமல்லி,
புதினா, பச்சை மிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மிளகாய் தூள்
மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் சோம்பு, வெந்தயம் சேர்த்து கிளறி, பின் கொத்து கறியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரை மணிநேரம் ஊற வைத்த பாசிப்பருப்பை கழுவி சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 1/2 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து நன்கு
கொதிக்க வைக்க வேண்டும். பாசிப்பருப்பானது வெந்ததும், அதில் ஊற
வைத்துள்ள அரிசியை கழுவி சேர்த்து கிளறி, மூடி வைத்து, உயர் தீயில்
வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, குக்கர் மூடியைத் திறந்தால், சுவையான மட்டன்
நோன்பு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications