Latest Updates
-
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்! -
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப நடிகை வைஷ்ணவியின் ஃபேஸ் பேக்கை போடுங்க! -
மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.! -
பலரும் அறியாத இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்.! -
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: குபேரன் அருளால் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறுமாம் -
சுக்கிரன்-சூரியன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகத்தால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
வெயிலை சமாளிக்க உதவும் சுவையான தர்பூசணி தோல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
இயற்கை பேரழிவின் போது எடுக்கப்பட்ட சில வியக்க வைக்கும் புகைப்படங்கள்!
இயற்கை பேரழிவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். சொல்லப்போனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு மனிதனும் ஓர் முக்கிய காரணம். மனிதர்கள் நிலத்தின் மீதுள்ள ஆசையால், நமக்கு நன்மைகளை வாரி வழங்கும் மரங்கள் அழிக்கப்பட்டு, அதனால் மழை வராமல், புவி அளவுக்கு அதிகமாக வெப்பமடைந்து, பல பேரழிவுகளை ஏற்படுத்துகிறது.
இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போவது, இயற்கை பேரழிவுன் போது எடுக்கப்பட்ட சில வியக்க வைக்கும் புகைப்படங்களைத் தான். இங்கு கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் உண்மையில் பேரழிவு ஏற்படும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு
ஐஸ்லாந்தில் 2010 ஆம் ஆண்டு பயங்கரமான எரிமலை வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இது அந்த எரிமலை வெடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான்.
Image Courtesy

கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு
இது கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலை 1-இல் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. நல்ல வேலை அப்போது அந்த வழியாக யாரும் வரவில்லை.
இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் பயணம் செய்வோர் மிகுந்த அவஸ்தைக்குள்ளானார்கள். இது அப்போது எடுக்கப்பட்ட படம் தான்.
Image Courtesy

பெருங்கடலை நோக்கி பாயும் எரிமலைக்குழம்பு
ஒரேகானின் போர்ட்லேண்ட்டில் இருந்து வந்த புகைப்பட கலைஞரான மில்ஸ் மோர்கன் என்பவர், ஏழு வருடங்களாக ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலைகளை கவனித்து, மிகவும் அழகிய இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் என்றால் பாருங்கள்.
Image Courtesy

கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு
பொலினீசியாவில் உள்ள டோங்காவில் கடலுக்கடியில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி பயங்கர எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
அதுவும் இந்த வெடிப்பின் போது வெளிவந்த புகை, நீராவி, சாம்பல் 1000 அடிக்கு மேல் சென்றது.
அப்போது அப்பகுதியில் 7.6 ரிக்டேர் அளவில் கடுமையான நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான்.
Image Courtesy

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி
இது ஒவ்வொருவரின் மனதையும் பதற வைக்கும் படி இந்தோனேசியால் ஏற்பட்ட சுனாமியின் போது மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் போது எடுத்த புகைப்படம்.
இந்த மோசமான சுனாமினால் சுமார் 230,000 உயிரை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy

ஜமுனா ஆற்றின் மீது பெய்த பருவ மழை
2006 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் ஜமுனா ஆறு நிரம்பு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, வட இந்தியாவில் சுமார் 1000 பேர் உயிரிழந்தோடு, 1000-த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இது அப்போது எடுத்த புகைப்படம்.
Image Courtesy

ஐஸ்லாந்தில் இரட்டை சூறாவளி
இந்த அழகிய புகைப்படம் 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தின் வான் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. உண்மையில் இது பயங்கரமாக இருந்தாலும், அழகாக உள்ளது தானே!
Image Courtesy



Click it and Unblock the Notifications











