Latest Updates
-
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்..
உலகம் அழியப் போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!
பண்டைய நூல்களில் 4 யுகங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவை கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்றவை. ஒவ்வொரு யுகமும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளைக் கொண்டிருக்கும். அதில் கலியுகம் மிகவும் சக்தி வாய்ந்தது. கலியுகம் என்றால் சனியுகம் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, இப்போது நாம் வாழும் உலகம் கலியுகம் என்பதால், இந்த கலியுகம் அழிவது குறித்து ஏற்கனவே வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலியுகம் அழியக் போகிறதெனில், என்னென்ன மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழும் என்பது குறித்தும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு நாம் வாழும் உலகம் அழியப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அறிகுறி #1
மதம், உண்மை, தூய்மை, சகிப்புத்தன்மை, கருணை, வாழ்நாள் அளவு, உடல் வலிமை மற்றும் நினைவாற்றல் போன்றவை நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வரும்.

அறிகுறி #2
கலியுகத்தில், ஒரு மனிதனின் நல்ல பிறப்பு, சரியான நடத்தை மற்றும் சிறந்த பண்புகள் போன்றவை அவனது செல்வத்தைக் கொண்டு கருதப்படும். மேலும் சட்டமும், நீதியும் ஒருவரது அந்தஸ்தைக் கொண்டே செயல்படுத்தப்படும்.

அறிகுறி #3
மக்களின் மனநிலை மிகவும் மோசமாக இருக்கும். ஆண்களும் பெண்களும் வெறும் வெளிப்புற ஈர்ப்பினால் மட்டும் ஒன்றாக வாழ்வார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்ற ஆரம்பிப்பார்கள். குடும்பம் மற்றும் திருமணம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் இருப்பார்கள்.

அறிகுறி #4
இயற்கை சீற்றங்களான சுனாமி, நிலநடுக்கம் போன்றவை ஏற்பட்டு, நிலப்பகுதியை நீர்ப்பகுதி ஆக்கிரமிக்கும்.

அறிகுறி #5
மக்கள் அளவுக்கு அதிகமாக குளிர், காற்று, வெப்பம், மழை மற்றும் பனிப்பொழிவால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாவார்கள். மேலும் கடுமையான பல்வேறு நோய்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, இறப்பை சந்திப்பார்கள்.

அறிகுறி #6
மக்களிடையே போட்டிகள், பொறாமைகள் போன்றவை அதிகரித்து, அதனால் மற்றவர்கள் வாழ்க்கையை கெடுக்கிறோம் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல், சுயநலவாதிகளாகவே இருப்பார்கள்.

அறிகுறி #7
பணத்திற்காக மனசாட்சிக்கு விரோதமாக நடந்து, ஒருவரை ஒருவரை அழித்து வாழ ஆரம்பிப்பார்கள். முக்கியமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்குட்பட்டு மோசமாக நடத்தப்படுவார்கள்.



Click it and Unblock the Notifications