Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
போரில் ராக்கெட் பயன்படுத்தி ஆங்கில படைகளை பயத்தில் உறைய வைத்த திப்பு சுல்தான்!!
ஹைதர் அலியின் மரணத்திற்கு பிறகு ஆட்சி அரியணையில் ஏறினார் திப்பு. திப்புவை இவரது நெருங்கிய வட்டம் மைசூரின் புலி என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள்.
சிறப்புமிக்க இந்திய அரசர்களில் திப்பு சுல்தானும் ஒருவர். இவர் ஹைதர் அலியின் இரண்டாவது மனைவியான ஃபாத்திமாவிற்கு மகனாக பிறந்தவர். ஹைதர் அலியின் மரணத்திற்கு பிறகு ஆட்சி அரியணையில் ஏறினார் திப்பு. திப்புவை இவரது நெருங்கிய வட்டம் மைசூரின் புலி என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள்.
கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!
ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு துரத்த பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியனுடன் திப்பு பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் மற்றும் மைசூர் அரசுக்கு மத்தியில் நடந்த மூன்றாவது மற்றும் நான்காம் மைசூர் போரின் போது, ஆங்கில கூட்டுப் படைகளினால் தோல்வியுற்றார்.
மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!!
தனது தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கடந்த 1799-ம் ஆண்டு மே நான்காம் நாள் போரின் போது உயிரிழந்தார். இவரது ஆட்சியின் சிறப்புகள் மிகவும் அற்புதமானது...

போரில் ராக்கெட் தாக்குதல்
திப்பு சுல்தான் போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு வரைபடத்தில், போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.

விவசாயத்தில் புதுமை
அந்த காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரக பயிர்கள் என்று விவசாய துறையில் நிறைய புதுமைகளை புகுத்தியவர் திப்பு சுல்தான்.

கப்பல் தளம்
இவரது ஆட்சி களத்தில் கப்பல் கட்டும் தளம் அமைத்து, பல பெரும் இராஜ்ஜியத்தையே வியப்பில் ஆழ்த்தியவர் திப்பு.

சகோதரத்துவம்
காலம், காலமாக இந்து, இஸ்லாமிய பிரச்சனை நிலவி வந்துக் கொண்டிருந்தாலும். தனது ஆட்சியில் இந்து இஸ்லாமி பிரச்சனைகள் ஏதுமின்றி சகோதரத்துவத்தை வளர்த்தவர் திப்பு சுல்தான்.

பொது விநியோகம்
நாம் இப்போது செயல்பாட்டில் கடைபிடித்து வரும் பொதுவிநியோகத் திட்டத்தை, திப்பு அவரது ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி
திப்பு சுல்தான் தனது ஆட்சியில் நிறைய வளர்ச்சி திட்டங்களை கொண்டிருந்தார். அதன் மூலம் கிராமங்களும், நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைய வைத்தார்.



Click it and Unblock the Notifications