Latest Updates
-
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? -
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்!
போரில் ராக்கெட் பயன்படுத்தி ஆங்கில படைகளை பயத்தில் உறைய வைத்த திப்பு சுல்தான்!!
ஹைதர் அலியின் மரணத்திற்கு பிறகு ஆட்சி அரியணையில் ஏறினார் திப்பு. திப்புவை இவரது நெருங்கிய வட்டம் மைசூரின் புலி என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள்.
சிறப்புமிக்க இந்திய அரசர்களில் திப்பு சுல்தானும் ஒருவர். இவர் ஹைதர் அலியின் இரண்டாவது மனைவியான ஃபாத்திமாவிற்கு மகனாக பிறந்தவர். ஹைதர் அலியின் மரணத்திற்கு பிறகு ஆட்சி அரியணையில் ஏறினார் திப்பு. திப்புவை இவரது நெருங்கிய வட்டம் மைசூரின் புலி என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள்.
கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!
ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு துரத்த பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியனுடன் திப்பு பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் மற்றும் மைசூர் அரசுக்கு மத்தியில் நடந்த மூன்றாவது மற்றும் நான்காம் மைசூர் போரின் போது, ஆங்கில கூட்டுப் படைகளினால் தோல்வியுற்றார்.
மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!!
தனது தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கடந்த 1799-ம் ஆண்டு மே நான்காம் நாள் போரின் போது உயிரிழந்தார். இவரது ஆட்சியின் சிறப்புகள் மிகவும் அற்புதமானது...

போரில் ராக்கெட் தாக்குதல்
திப்பு சுல்தான் போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு வரைபடத்தில், போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.

விவசாயத்தில் புதுமை
அந்த காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரக பயிர்கள் என்று விவசாய துறையில் நிறைய புதுமைகளை புகுத்தியவர் திப்பு சுல்தான்.

கப்பல் தளம்
இவரது ஆட்சி களத்தில் கப்பல் கட்டும் தளம் அமைத்து, பல பெரும் இராஜ்ஜியத்தையே வியப்பில் ஆழ்த்தியவர் திப்பு.

சகோதரத்துவம்
காலம், காலமாக இந்து, இஸ்லாமிய பிரச்சனை நிலவி வந்துக் கொண்டிருந்தாலும். தனது ஆட்சியில் இந்து இஸ்லாமி பிரச்சனைகள் ஏதுமின்றி சகோதரத்துவத்தை வளர்த்தவர் திப்பு சுல்தான்.

பொது விநியோகம்
நாம் இப்போது செயல்பாட்டில் கடைபிடித்து வரும் பொதுவிநியோகத் திட்டத்தை, திப்பு அவரது ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி
திப்பு சுல்தான் தனது ஆட்சியில் நிறைய வளர்ச்சி திட்டங்களை கொண்டிருந்தார். அதன் மூலம் கிராமங்களும், நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைய வைத்தார்.



Click it and Unblock the Notifications











