Latest Updates
-
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்.. -
சொந்த நட்சத்திரம் செல்லும் கேது: மார்ச் 29 முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ் அனைத்தும் கிடைக்கப்போகுது.. -
IPL 2026: தோனி ஏன் 'தல' அழைக்கப்படுகிறார்? எப்போதிருந்து தோனிக்கு இந்த பெயர் வந்தது தெரியுமா? -
கொத்தவரங்காய் கெட்டி குழம்பு ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க...சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...! -
மதியம் சீக்கிரம் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த துவையலை செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்..
தினமும் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
இங்கு தொப்புளைக் கொண்டே உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நம் உடலில் தொப்புள் மிகவும் சென்சிடிவ்வான பகுதி. இந்த தொப்புள் உடலிலேயே ஆற்றல் வாய்ந்த பகுதி என்று கூட சொல்லலாம். ஏனெனில் தொப்புளைக் கொண்டே உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதுவும் தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய்களை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இங்கு தொப்புளில் எந்த எண்ணெயை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தொப்புள் வழி தீர்வு காணுங்கள்...

வேப்பிலை எண்ணெய்
வேப்பிலை எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

எலுமிச்சை எண்ணெய்
எலுமிச்சை எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் கருமையான புள்ளிகள் அகலும்.

நெய்
நெய்யை தொப்புளில் தடவுவதன் மூலம், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயை தொப்புளில் தடவுவதன் மூலம், வறட்சியால் உதடுகளில் வெடிப்புகள் வருவது தடுக்கப்படும்.

பிராந்தி
ஒரு பஞ்சுருண்டையை பிராந்தியில் நனைத்து, தொப்புளில் வைத்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி அல்லது பிடிப்புக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.

ஆல்கஹால்
ஏதேனும் ஒரு ஆல்கஹாலில் பஞ்சுருண்டையை நனைத்து தொப்புளில் வைப்பதால், சளி, காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

குறிப்பு
எண்ணெயை தொப்புளில் வைக்கும் போது, தொப்புளைச் சுற்றி வலஞ்சுழி, இடஞ்சுழியாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இச்செயலை உணவு உட்கொண்ட உடனேயே செய்யக்கூடாது. குறைந்தது 1 மணிநேர இடைவெளி விட வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications











