புதிய பாபா வாங்கா கணிப்பின் படி அமெரிக்கா-ஈரான் போருக்கு பின் அமெரிக்காவின் நிலை என்னவாகும் தெரியுமா?

வரலாற்றில் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள் என்று வரும்போது அதில் மிகவும் பிரபலமானவர் பாபா வாங்கா. ஏனெனில் அவர் உலக வரலாற்றை மாற்றிய பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்திருந்தார். தற்போது பலரும் தீர்க்கதரிசனங்களை கூறி வருகின்றனர். அதில் வெகுசிலர் மட்டுமே புகழ்பெற்றவர்காளாக மாறுகிறார்கள்.

'புதிய பாபா வங்கா' என தற்போது பிரபலமடைந்து வரும் செலினா அவலான், ஒரு 'பெரும் விழிப்புணர்வு' (great awakening) குறித்து எச்சரித்துள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவுகள் குறித்தும் சில திகிலூட்டும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு போப் பிரான்சிஸின் மறைவையும், அக்டோபர் 2022-இல் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததையும் துல்லியமாக கணித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

New Baba Vanga Selina Avalon s Shocking Prediction About Iran-Israel War

ஈரான்-இஸ்ரேல் பற்றிய கணிப்பு

தற்போது, ​​அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைமையில் ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் குறித்து அவர் சில அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை செய்துள்ளார். இந்த போர் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்து, 'மூன்றாம் உலகப் போர்' போன்ற பெரும் போராக மாறும் என்று செலினா குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, 'டொனால்ட் ட்ரம்ப் ஒரு போர்த் தலைவராகச் செயல்பட வேண்டிய காலகட்டத்திற்கு' உலகம் தற்போது நுழைந்துள்ளது.

புதிய பாபா வாங்காவின் கணிப்பு என்ன?

மக்கள் தியானம் செய்து, தங்கள் வாழ்வில் பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என செலினா அவலோன் பரிந்துரைத்துள்ளார். "மக்கள் உண்மையிலேயே தியானம் செய்து, தங்கள் வாழ்க்கையை எங்கே மேம்படுத்தலாம், எங்கே மாற்றலாம் என்று பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது கிட்டத்தட்ட ஒரு காலவரிசைப் பிளவு போன்றது. நீங்கள் புதிய மன்னர்களையும், உலகத் தலைவர்களையும், போர்களையும் காண்பீர்கள். அப்போதுதான் மக்கள் ஒன்று மூழ்குவார்கள் அல்லது நீந்தி தப்பிப்பார்கள்," என்று அவலோன் கூறியதாக ஐரிஷ் மிரர் மேற்கோள் காட்டியுள்ளது.

முக்கிய நிகழ்வுகளை முன்னறியும் திறன்

உலகில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் திறன் தன்னிடம் இருப்பதாக செலினா கூறுகிறார். மேலும், இது ஒரு மாபெரும் விழிப்புணர்வுக்கானக் காலம் என்றும் அவர் கூறியுள்ளார். "அவர்கள் விழித்தெழுந்து ஒரு நேர்மறையான காலப்பாதையில் பயணிப்பார்கள் அல்லது வீழ்ச்சியடைந்து ஒரு எதிர்மறையான காலப்பாதையில் சிக்கிக்கொள்வார்கள். இது ஒரு மாபெரும் விழிப்புணர்ச்சிக்கான காலம். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலேயே இது நிகழும் என்பதை நான் முன்னறிந்திருந்தேன் " என்று அவர் கூறியுள்ளார். மேலும் புதுப்புது உலகத் தலைவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள், அவர்கள் எளிதில் மாற்றப்படக்கூடியவர்கள்," என்று செலினா கூறியுள்ளார்.

காமனேயின் படுகொலை

'புதிய பாபா வங்கா' என்று அழைக்கப்படும் செலினா, ஈரானின் உச்சத்தலைவர் காமனேயின் படுகொலையைத் தான் முன்னறிவித்ததாகக் கூறினார்; மேலும், அவருக்குப் பின் வரும் வாரிசு அவரது சொந்த இரத்த உறவைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரானில் தற்போது நிலவும் ஆட்சிமுறை ஒரு சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்றும், அது நீண்ட காலம் நீடிக்காது என்றும் சலினா முன்னறிவித்துள்ளார். ஆனால் அவருக்குப் பின் வேறொருவர் வருவார். அதுவும் ஒரு சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும் என்றாலும், அந்தப் புதிய தலைவருக்குச் சற்று இளமையான தோற்றம் இருக்கும்," என்று அவர் கூறினார். ஈரானின் மூன்றாவது 'உச்சத் தலைவர்' சற்று 'இளமையான தோற்றத்துடன்' இருப்பார் என்றும், அவரிடம் 'நெப்போலியனைப் போன்ற' சில குணாதிசயங்கள் தென்படும் என்றும் அவர் முன்னறிவித்தார். அந்தத் தலைவர், அமெரிக்காவிற்கு எதிராகப் "பதிலடி கொடுக்கும்" ஒருவராக இருப்பார் என்றும் அவர் கூறினார்.

டொனால்ட் டிரம்பின் சகாப்தம்

டொனால்ட் டிரம்ப் ஒரு போர்த் தலைவராக உருவெடுப்பதற்கான சகாப்தம் இதுவே என்று செலினா கூறியுள்ளார். "நாம் ஒரு போரை சந்திப்போம்," என்று கூறிய அவர், அமெரிக்க ஜனாதிபதி மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி நடைபெறும் என்றும், உடல்நலக் காரணங்களால் அவர் பதவியிலிருந்து விலக நேரிடும் என்றும் மேலும் தெரிவித்தார். மேலும் ஜே.டி. வான்ஸ் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பார் என்று சலினா கூறினார்.


ரோமானியப் பேரரசு

அமெரிக்காவையும் இஸ்ரேலையும் உள்ளடக்கிய, ரோமானியப் பேரரசைப் போன்ற ஒரு புதிய பேரரசு உருவாகக்கூடும் என்று செலினா மறைமுகமாக கூறியுள்ளார். இன்னும் சில ஆண்டுகளில், ஈரான் நாடானது துபாயைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். சலினா தனது 11-வது வயதிலேயே இத்தகைய கணிப்புகளை வெளியிடத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னை மிகவும் அறிவியல் பூர்வமான சிந்தனை கொண்டவராக அவர் விவரித்துக்கொள்கிறார். தான் தனது தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே சார்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, March 23, 2026, 12:17 [IST]
Desktop Bottom Promotion