Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
இந்த அறிகுறிகள் உங்கள் உடலில் உள்ள பிரச்சனையைத் தான் சொல்கிறது என்று தெரியுமா?
இங்கு நம் உடலினுள் உள்ள பிரச்சனைகளை உடல் நமக்கு எந்த அறிகுறிகளின் மூலம் உணர்த்துகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவரது உடலினுள் உள்ள பிரச்சனைகள், குறிப்பிட்ட சில அறிகுறிகளின் மூலம் வெளிப்படும். எப்போதுமே உடல் தனக்கு தேவையானதை ஒருசில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும்.
உதாரணமாக, பசி ஏற்படுகிறது என்றால், உடலின் சீரான இயக்கத்திற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. ஆகவே சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தவே பசி ஏற்படுகிறது.
இங்கு நம் உடலினுள் உள்ள பிரச்சனைகளை உடல் நமக்கு எந்த அறிகுறிகளின் மூலம் உணர்த்துகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அறிகுறி #1
கர்ப்பமாக இல்லாமல், புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக உள்ளதா? அப்படியெனில், பித்தப்பை மற்றும் கல்லீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம். இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

அறிகுறி #2
இறைச்சிகளின் மீது நாட்டம் அதிகமாக இருந்தால், உங்கள் உடல் புரோட்டீனை அதிகம் கேட்கிறது என்று அர்த்தம். சைவ பிரியர்களாக இருந்தால், தாவர வகை புரோட்டீனை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

அறிகுறி #3
சர்க்கரை உணவுகளின் மீது ஆவல் அதிகம் உள்ளதா? ஏன் என்று தெரியுமா? வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் அளவுக்கு அதிகமாக சர்க்கரை உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை உணர்த்த தான். அதாவது நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.

அறிகுறி #4
உங்களால் தூங்க முடியவில்லையா? கால்களில் அடிக்கடி தசைப் பிடிப்புகள் ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் உடலில் மக்னீசியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இக்குறைபாட்டைப் போக்க வாழைப்பழம், நட்ஸ், பச்சை இலைக்காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

அறிகுறி #5
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, இதுவரை ப்ளாஷ் பயன்படுத்தாமல், திடீரென்று செய்தால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். மற்றொன்று உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தம் கசியும்.

அறிகுறி #6
உப்புள்ள உணவுகளின் மீது நாட்டம் அதிகரிப்பதற்கு, உடலின் உட்பகுதியில் காயங்கள் அல்லது தொற்றுகள் இருப்பதால் தான்.



Click it and Unblock the Notifications