Latest Updates
-
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்.. -
சொந்த நட்சத்திரம் செல்லும் கேது: மார்ச் 29 முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ் அனைத்தும் கிடைக்கப்போகுது.. -
IPL 2026: தோனி ஏன் 'தல' அழைக்கப்படுகிறார்? எப்போதிருந்து தோனிக்கு இந்த பெயர் வந்தது தெரியுமா? -
கொத்தவரங்காய் கெட்டி குழம்பு ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க...சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...! -
மதியம் சீக்கிரம் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த துவையலை செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்..
இவைகளால் தான் சிறு குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது என்று தெரியுமா?
இங்கு எந்த காரணங்களால் சிறு குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நம் செரிமான மண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அதில் சில நன்மை விளைவிப்பதாகவும், இன்னும் சில தீங்கு விளைவிப்பதாகவும் இருக்கும். எப்போது செரிமான மண்டலத்தில் இவ்விரண்டின் அளவிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறதோ, அப்போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.

அதிலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு செரிமான பாதையில் அதிகரிக்கும் போது, நிலைமை இன்னும் மோசமாகிறது. குறிப்பாக செரிமான மண்டலத்திலேயே சிறு குடல் தான் உணவுகளை செரித்து, அதில் உள்ள சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
இப்பகுதியில் கட்டாயம் பாக்டீரியாக்கள் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சில காரணிகளால் சிறு குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. இங்கு அந்த காரணிகள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

உடற்குழி நோய்
ஆய்வுகளின் படி, உடற்குழி நோய் உள்ள 66% மக்களுக்கு சிறு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீயாக்களின் வளர்ச்சி அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்களது குடலை சோதிக்கும் போது, அவர்களின் குடலில் 43% கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி இருப்பது தெரிய வந்துள்ளது.

மருந்துகள்
நோயெதிர்ப்பு மண்டலத்தை அல்லது செரிமான பாதையை பாதிக்கும் மருந்துகள், சிறு குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே கண்ட மாத்திரைகளை எடுக்காதீர்கள்.

ஆட்டோ-இம்யூன் நோய்கள்
நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து ஏற்படும் நோய்களும், சிறு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

முதுமை
60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு, சிறு குடலில் பாக்டீரியாக்களின் மிகை வளர்ச்சிக்கான வாய்ப்பு ஏராளமாக உள்ளது.

ரோஸாசியா
ஆய்வு ஒன்றில் ரோஸாவியாவிற்கும், சிறு குடல் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் ரோஸாசியாவை உண்டாக்கும் பாக்டீரியா அழிக்கப்படும் போது, சிறு குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











