உங்கள் கால் பெருவிரலுக்கு கீழே வீக்கம் உள்ளதா? இதைப் போக்க இதோ ஓர் அற்புத வழி!

இங்கு கால் பெருவிரல் வீக்கத்தைப் போக்க உதவும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கால் பெருவிரல் வீக்கம் ஏற்படுவதற்கு காரணம் அவ்விடத்தில் உப்பு தேங்கியிருப்பதால் தான். மேலும் ஆன்ஜினா, காய்ச்சல், கீல்வாதம், மோசமான வளர்சிதை மாற்றம், கீல்வாத நோய், மோசமான உணவு மற்றும் நீண்ட காலமாக அசௌகரியமான காலணிகளாலும் இது உருவாகலாம்.

How To Get Rid Of Bunions Completely Natural

Image Courtesy

இம்மாதிரியான பெருவிரல் வீக்கம் உள்ளவர்கள், காலணிகளை அணிவதில் சிரமத்தை உணர்வார்கள். இப்படி பெருவிரலில் உள்ள வீக்கத்தை நீக்க அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்றும் பலரும் நினைப்பார்கள். ஆனால் இயற்கை வழிகளின் மூலமும் அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீர்வு

தீர்வு

கால் பெருவிரலில் உள்ள வீக்கத்தைப் போக்க வேண்டுமானால், முதலில் உடலை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் அற்புத பானம் உடலை சுத்தம் செய்து, உடலில் இருந்து உப்புக்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பொடித்த பிரியாணி இலை - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 300 மிலி

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

நீரில் பிரியாணி இலையைப் போட்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, நாள் முழுவதும் அந்நீரைக் குடிக்க வேண்டும்.

எவ்வளவு காலம் பின்பற்ற வேண்டும்?

எவ்வளவு காலம் பின்பற்ற வேண்டும்?

இந்த சிகிச்சையை தொடர்ச்சியாக 3 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலையில் இந்நீரைத் தயாரித்து, மறுநாள் பருக வேண்டும். பின் 7 நாட்கள் கழித்து மீண்டும் இந்த சிகிச்சையை பின்பற்ற வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கக்கூடும்

அடிக்கடி சிறுநீர் கழிக்கக்கூடும்

இந்த சிகிச்சையின் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், உடலில் உள்ள உப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion