Latest Updates
-
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்து கிரகங்களும் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது மற்ற கிரகங்களுடன் இணைந்து சில சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. நவகிரகங்களில் சூரியன் கிரகங்களின் ராஜா என்று கருதப்படுகிறார், புதன் கிரகங்களின் இளவரசர் என்று கருதப்படுகிறார். தற்போது இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கப்போகின்றன.
ஏப்ரல் 11 ஆம் தேதி சூரியனும், புதனும் குருபகவானால் ஆளப்படும் மீன ராசியில் இணைந்து புதாதித்ய உருவாகுகிறது. இந்த மங்களகரமான யோகம் சில ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் வருமானம் மற்றும் ஆதாயங்களுக்கான வீட்டில் உருவாகி வருகிறது. இதனால் அவர்களின் தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படப்போகிறது. இதன் விளைவாக, முதலீடுகள் மூலம் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கலாம், மேலும் அவர்களின் நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம். அவர்கள் முதலீடுகளைத் திட்டமிட்டால் என்றால், அதிலிருந்து பலன்களைப் பெற இதுவே சிறந்த காலம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக மாறலாம்.அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும், மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் சிறப்பான நன்மைகளை அடையலாம். அவர்களின் உடல்நலம் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதியாக புதன் இருப்பதால் இந்த புதாதித்ய யோகத்தின் பலன்களை நேரடியாக அனுபவிக்கலாம். இந்த கிரக சேர்க்கையானது மிதுன ராசியின் தொழில் அல்லது கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டில் உருவாகிறது. இது அவர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டம் அவர்களுக்கு பெரும் வெற்றியைத் தரப்போகிறது, அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு துணையாக இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் அவர்களின் முயற்சிகள் திருப்திகரமான பலன்களை அளிக்கும்.
வேலையில் சம்பள உயர்வு மற்றும் போனஸ் போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகம் தொடர்பாக வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அபரிமிதமான வளர்ச்சியை அளிக்கப்போகிறது. ஏனெனில் இந்த யோகம் அவர்களின் லக்னத்திலேயே உருவாகிறது. இந்த யோகத்தால் அவர்கள் தொழில் வாழ்க்கையில் புதிய உயரத்தைத் தொடப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் திருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. மீனத்தில் புதனின் சஞ்சாரம் அவர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடும், இது அவர்களின் சமூக அந்தஸ்தை அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான காலம்.
திருமணமானவர்ள் வாழ்க்கையில் உறவில் அரவணைப்பும், புரிதலும் அதிகரிக்கும். நிதி நிலை மற்றும் மன நிம்மதி அவர்கள் வாழ்க்கையில் மேலும் நிறைவை உணர உதவும். ஒட்டுமொத்தமாக, இந்த புதாதித்ய யோகம் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












