Just In
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 3 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தினமும் காலையில் பிரட்டை உணவாக உட்கொள்வதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்!
இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் பெரும்பாலும் காலை வேளையில் பிரட்டை தான் காலை உணவாக சாப்பிடுவார்கள். ஏனெனில் பிரட் நேரத்தை மிச்சப்படுத்தும் என்பதால் தான். ஆனால் இந்த பிரட்டை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். அதிலும் வெள்ளை பிரட்டை உட்கொண்டு வருபவராயின், உடல் நிலை இன்னும் மோசமாக இருக்கும்.
வெள்ளை பிரட் சுவையாக இருக்கலாம். ஆனால் அது சுத்திகரிக்கப்பட்ட மாவினால் அதாவது மைதாவால் தயாரிக்கப்படுவதால், அதில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. அப்படி சத்துக்களே இல்லாத பிரட்டை உட்கொள்ளும் போது, அதனால் உடல்நிலை தான் மோசமாகும்.
இங்கு தினமும் காலையில் வெள்ளை பிரட்டை உணவாக உட்கொள்வதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல் பருமனடையும்
தினமும் காலையில் வெள்ளை பிரட்டை சாப்பிட்டு வந்தால், அதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை பிரட்டானது பசியை அதிகரிக்கும். இதனால் அடிக்கடி எதையேனும் உட்கொண்டு, உடல் எடை அதிகமாகும்.
சோம்பல் அதிகமாகும்
இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும், அதிகப்படியான சோம்பலை உணர்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் காலையில் உட்கொண்ட பிரட் தான் காரணம். எப்படியெனில், பிரட்டை உட்கொண்ட பின்னர் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, திடீரென்று குறைய ஆரம்பிக்கும்.
நீரிழிவு
வெள்ளை பிரட் நீரிழிவு வரும் வாய்ப்பை அதிகரிக்கும். ஏனெனில் வெள்ளை பிரட் இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். இப்படியே தினமும் உட்கொண்டு வந்தால், அதனால் நாளடைவில் நீரிழிவால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் நீரிழிவு இருந்தால் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த அபாயம் அதிகம் உள்ளது.
மலச்சிக்கலை சந்திக்கக்கூடும்
சிலருக்கு பிரட் உட்கொண்ட பின் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். ஏனெனில் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து ஏதும் இல்லை. இப்படி நார்ச்சத்து குறைவாக இருப்பதை காலையில் உட்கொண்டால், குடலில் நீர்த்தேக்கம் இல்லாமல் கழிவுகள் இறுக்கமடைந்து வெளியேற முடியாமல் இருக்கும்.
உயர் கொலஸ்ட்ரால்
நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து இல்லாததால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.
ஒருவித எரிச்சலுடன் இருக்கச் செய்யும்
ஆம், வெள்ளை பிரட்டை தினமும் உட்கொண்டு வந்தால், நீங்கள் மற்றவர்களுடன் எரிந்து விழுவதோடு, அதிக கோபம் அடைவீர்கள். ஏனெனில் தினமும் பிரட்டை உட்கொள்வதால், மூளையில் சுரக்கும் செரடோனின் என்னும் சந்தோஷமான மனநிலையுடன் வைத்துக் கொள்ளும் கெமிக்கல் பாதிக்கப்படுகிறது. மேலும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரிக்கும்.
பசி அதிகரிக்கும்
வெள்ளை பிரட்டில் சத்துக்கள் ஏதும் இல்லாததால், அவற்றை உட்கொள்வதன் மூலம் பசி முற்றிலும் அடங்காது. இதன் காரணமாக பகலில் கண்ட உணவுகளை எப்போதும் உட்கொள்ள நேரிடும்.