Latest Updates
-
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த மாதிரி கிச்சடி செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்... ட்ரை பண்ணுங்க! -
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? 1 கப் தயிர் இருந்தா.. 10 நிமிடத்தில் இத செய்யுங்க... -
இந்தியாவில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருக்கும் டாப் 10 மாநிலங்கள்... சில லட்சம் பேர்தான் இங்க வாழறாங்களாம். -
Ram Navami 2026: ராம நவமி நாளில் ராமரின் அருளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
1 வருடம் கழித்து உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்: ஏப்ரல் மாதத்தில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
கோதுமை ரவா ஊத்தாப்பமும்.. தேங்காய் சட்னியும்.. - டக்குன்னு எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம்...! -
செவ்வாய்-புதன் மீன ராசியில் இணைவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மைசூர் தேங்காய் சட்னி ரெசிபி.. தேங்காய் சட்னிய இந்த மாதிரி செஞ்சு பாருங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க...
நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.
இதை தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர, புகைப்பிடித்து கருகி போன நுரையீரல் சுத்தமாகும்!
அதேப் போல் நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்ஸிஜனை சுவாசித்து சேகரித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
எனவே ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் பலப்படுத்த உதவும் ஓர் பானம் கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தான் அதிகம்
சளி, இருமல் போன்ற பொதுவான உடல் நல பிரச்சனையால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒருவருக்கு சளி நீண்ட நாட்கள் நீடித்திருந்தால், நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒரு நாளில் சளியின் உற்பத்தி
நம் உடல் ஒரு நாளில் 1-2 லிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது. அதில் பெரும்பாலானலை அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிடும். ஒருவேளை ஒருவருக்கு சளி பிடித்தால், மூச்சுக்குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு, அது வேறுபல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மஞ்சள் அல்லது பச்சை நிற சளி
சிலருக்கு சளியானது நீண்ட நாட்கள் நீடித்து, அந்த சளி பச்சை, மஞ்சள் நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வெளியேறினால், உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்போது மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.

அற்புத பானம்
நுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிக்க ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. அதைப் பருகினால் நுரையீரலில் உள்ள சளி மட்டுமின்றி, இதர நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்பட்டுவிடும்.

பானம் செய்ய தேவையான பொருட்கள்:
* தேன் - 100 கிராம்
* தண்ணீர் - 100 மிலி
* எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* ஓட்ஸ் - 50 கிராம்

செய்முறை:
* முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.
* பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்திருப்பதை நன்கு உணரலாம். வேண்டுமானால் இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
குழந்தைகள் தான் அதிக அளவில் சளி பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். எனவே இந்த பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். கண்டிப்பாக, இந்த பானத்தைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு சளி பிரச்சனை முற்றிலும் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.

சளியை நீக்கும் வேறொரு வழி
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற மற்றொரு சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10-15 நிமிடம் நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.



Click it and Unblock the Notifications











