Latest Updates
-
பலாக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்... -
புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி... இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க... தோசை, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்? - டாக்டர். பிள்ளை விளக்கம் -
ஏப்ரல் மாதத்தில் நஷ்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்! -
பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
நினைவுத் திறன் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் அற்புத பானங்கள்!
இங்கு மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் அற்புத பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் எதையேனும் ஒன்றை தினமும் குடித்து வந்தால், மூளை சிறப்பாக செயல்படும்.
நாம் உண்ணும் உணவில் கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் சரியான அளவில் இருந்தால், உடலுறுப்புக்கள் எவ்வித இடையூறுமின்றி நன்கு செயல்படும். ஒவ்வொருவருக்கும் நல்ல புத்திசாலியாக, எதிலும் வல்லவராக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்கு மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டுமானால், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான கொழுப்புக்கள் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் மற்றும் ஆற்றலை வழங்கி, மூளைச் செல்கள் சிறப்பாக செயல்பட உதவும்.
இங்கு மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் அற்புத பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் எதையேனும் ஒன்றை தினமும் குடித்து வந்தால், மூளை சிறப்பாக செயல்படும்.

பானம் #1
மிக்ஸியில் 1 கப் பால், வாழைப்பழம், 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார். இந்த பானத்தை குடித்தால், ஞாபக மறதி தடுக்கப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கும்.

பானம் #2
ஒரு கப் பெர்ரி பழங்களை மிக்ஸியில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சில துண்டுகள் அன்னாசிப் பழம், 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகள் மற்றும் 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்த பானத்தைக் குடித்து வந்தால், மூளையினுள் உட்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

பானம் #3
மிக்ஸியில் ஒரு வாழைப்பழத்தைப் போட்டு, அதோடு 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகள், 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள், 1 கப் சோயா பால் மற்றும் 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பானம் சுவையாக இருப்பதோடு, மனதை ரிலாக்ஸாகவும், புத்துணர்ச்சியுடனும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.

பானம் #4
மிக்ஸியில் 1 கப் மாதுளை ஜூஸ், 1/2 கப் ஸ்ட்ராபெர்ரி, 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 கப் தயிர் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூளையின் சக்தியை மேம்படுத்தும்.

பானம் #5
1 கப் பசலைக் கீரையுடன், 1 கப் மாம்பழம், 1 அவகேடோ பழம் மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் குடித்து வந்தால், அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











