Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கொசுக்களின் உயிரைப் பறிப்பதற்கு பதிலாக மனிதர்களின் உயிரைப் பறிக்கும் கொசுவர்த்தி- அதிர்ச்சி தகவல்
கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகரப்புறங்களிலும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பலரும் தங்கள் வீடுகளை எப்போதும் மூடி வைத்தவாறு இருக்கின்றனர். மேலும் கடைகளில் விற்கப்படும் கொசுக்களை விரட்டும் மெஷின்களை வாங்கி மாலை வந்ததும் அதனை வீட்டில் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் அவற்றால் கொசுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைத்தவாறு தெரியாததால், இன்னும் பல வீட்டுகளில் கொசுவர்த்தியை வீட்டில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
கொசுவர்த்தியை வீட்டில் பயன்படுத்தி, அதிலிருந்து வெளிவரும் புகையை அதிக நேரம் சுவாசித்து வந்தால் மரணத்தை தழுவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்காக கொசுக்களை விரட்டும் கொசுவர்த்தியை பயன்படுத்தாமல், அதன் கடியை தாங்கிக் கொள்ள வேண்டுமா என்று கேட்கலாம். ஆனால் அதற்கும் ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன.

100 சிகரெட்டிற்கு சமம்
ஆய்வு ஒன்றில் தொடர்ந்து 8 மணிநேரம் கொசுவர்த்தியின் புகையை சுவாசித்தவாறு இருப்பது என்பது, 100 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று தெரியவந்துள்ளது.

நுரையீரல் புற்றுநோய்
தாய்வானில் உள்ள மருத்துவ நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வில், தாய்வான் மக்களில் 50 சதவீத மக்கள் நுரையீரல் புற்றுநோயால் இறந்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் யாரும் சிகரெட் பிடித்ததால் இறக்கவில்லை. மாறாக இவர்களின் வீட்டில் அன்றாடம் கொசுவர்த்தி ஏற்றி வந்ததால், அதன் புகையை நுகர்ந்து நுரையீரல் புற்றுநோயால் இறக்க நேர்ந்தது தெரிய வந்துள்ளது.

இதர சுவாச பிரச்சனைகள்
கொசுவர்த்தி புகையை தொடர்ந்து சுவாசித்து வந்தால் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர நுரையீரல் பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடூம்.

கொசுக்களை எப்படி விரட்டுவது?
கொசுவர்த்தி ஏற்றக்கூடாதெனில் வேறு எப்படி கொசுக்களை விரட்டுவது என்று பலரும் கேட்கலாம். அதற்கு அருமையான சில வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கொசுக்களில் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கொசு வலை
கொசுக்களில் தொல்லையில் இருந்து விடுபட கொசுவலையை வீட்டின் ஜன்னலில் பொருத்திக் கொள்வது நல்ல பாதுகாப்பைத் தரும்.

பூண்டு
அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வந்தால், அதன் மணத்தால் கொசுக்கள் அண்டுவதைத் தவிர்க்கலாம். மேலும் பூண்டு இதயத்திற்கு மிகவும் நல்லது.

வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெயை சருமத்தில் தடவிக் கொண்டு இரவில் படுத்தால், கொசுக்கள் கடிப்பதில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications